தொழில் சிறக்க சக்கரத்தாழ்வார் வழிபாடு.

business
- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய தொழிலை ஆரம்பித்து அந்த தொழிலை படிப்படியாக முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்து சிறப்பாக நடத்திக் கொண்டு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு நடத்திக் கொண்டு வரும்பொழுது தங்களின் வளர்ச்சி பிடிக்காத மற்றவர்கள் அந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பல இடையூறுகளை தருவார்கள். அது மட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றல்களையும் உபயோகப்படுத்துவார்கள். இப்படி இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு சக்கரத்தாழ்வாரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும் தெய்வமாக பல இருக்கின்றன. கிராமத்திற்கு காக்கும் தெய்வமாக அய்யனார், முனீஸ்வரர், சுடலை மாடசாமி போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள். அதே போல் சிவாலயங்களில் காக்கும் தெய்வமாக பைரவர் விளங்குகிறார். இதே போல் தான் பெருமாள் கோவிலில் காக்கும் தெய்வமாக விளங்குபவர் சக்கரத்தாழ்வார்.

- Advertisement -

பைரவருக்கு எந்த அளவிற்கு நாம் வழிபாடு மேற்கொள்கின்றோமோ அவருக்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கிறதோ அதே அளவிற்கு தான் சக்கரத்தாழ்வாருக்கும் சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. முழுமனதோடு சக்கரத்தாழ்வாரை யார் முறையாக வழிபடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தையும் அவர் நிவர்த்தி செய்வார்.

தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகவும், தொழிலிலும் வழக்குகளில் வெற்றி பெறவும் செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறை. வழிபாடு மேற்கொள்பவருடைய ராசி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து வளர்பிறைநாளில் இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து துளசி மாலை சாற்றி 12 முறை அவரை வலம் வந்து வழிப்பட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வழக்குகளில் வெற்றியும் அடைவார்கள். 48வது நாள் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை சக்கரத்தாழ்வாருக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

எதிர்மறை சக்திகளின் தாக்குதலால் தங்கள் குடும்பம் சீர்குலைந்து விட்டது. இனிமேல் வாழ வழியே இல்லை என்று நினைப்பவர்கள் கூட சக்கரத்தாழ்வாரை செவ்வாய்க்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர அவர்கள் குடும்பத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி கஷ்டமான சூழ்நிலை படிப்படியாக மாற ஆரம்பிக்கும். தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.

சக்கரத்தாழ்வாரை இந்த முறையில் வழிபட்டு அவரின் அருளை பரிபூரணமாக பெற்று நம் வாழ்விலும், தொழிலிலும், வழக்கிலும் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -