நல்லபடியாக குழந்தை பிறக்க செய்ய வேண்டிய பரிகாரம்

women
- Advertisement -

ஒரு குழந்தை கருவில் உருவாகிவிட்டது. அந்த குழந்தை பத்திரமாக நாளுக்கு நாள் கருவில் வளர வேண்டும். அதே சமயம் அந்த குழந்தைகளுக்கு முன்னோர்களின் சாபத்தால், அதாவது அந்த குடும்பத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சனைகளின் தாக்கம், அந்த குழந்தையை பின் தொடரக்கூடாது, குழந்தை பிறக்கும் போது எந்த ஒரு தோஷமும் இல்லாமல், சுத்த ஜாதகத்தோடு பிறக்க வேண்டும்.

குழந்தை முழுசாக வயிற்றில் வளர்ந்து, குறை பிரசவம் ஆகாமல் பிறக்க வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தையை பத்திரமாக ஈன்றெடுக்க அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

கருவுற்ற பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை நாமக்கட்டி. பூஜை பொருட்கள் விற்கக்கூடிய கடை, சில மளிகை கடைகளில் இந்த பொருள் கிடைக்கும். வாங்கி வச்சுக்கோங்க. கர்ப்பம் தரித்த பெண்கள் மூன்று மாதத்திற்கு பிறகு தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். தினம் தினம் செய்யலாம். உங்களுடைய வீட்டில் நீங்களே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

குலதெய்வத்தை நினைச்சுக்கோங்க, முருகனை நினைச்சுக்கோங்க, சிவபெருமானை நினைச்சுக்கோங்க, இந்த நாமக்கட்டையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வயிற்றுப் பகுதியில் இந்த நாமக் கட்டியை வைத்து ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். ஒருமுறை எழுதினால் கூட போதும். இப்படி இரண்டு எழுத்துக்களாக இல்லாமல் ஒரே எழுத்தா கூட ஓ போட்டு அதன் நடுவே புள்ளி வைக்கலாம் அது உங்களுடைய இஷ்டம் தான்.

- Advertisement -

நாமக் கட்டியை கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே, உங்கள் வயிற்றுக்கு மேல் பக்கத்தில் இந்த வார்த்தையை எழுதிக் கொள்ளலாம். லேசாக உள்ளே குழந்தை இருக்கின்றது என்ற கவனத்தோடு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளவும். குழந்தைக்கு இந்த நாமகட்டி குளிர்ச்சியை மட்டுமே கொடுக்க கூடிய ஒரு பொருள்.

இந்த நாமக்கட்டியை அந்த காலத்தில் ராம கட்டி என்று கூட சொல்லுவார்கள். ராமருக்கு நாமம் போடுவதற்காக பயன்படுத்தக்கூடிய கட்டி அது. காலப்போக்கில் நாம கட்டியாக மாறிவிட்டது. சரி அது போகட்டும். இப்படி தினம் தினம் ஓம் எனும் வார்த்தையை நாமக்கட்டையை கொண்டு உங்களுடைய வயிற்றின் மேல் பக்கத்தில் எழுதும்போது உங்களுடைய குழந்தை நல்லபடியாக பிரசவிக்கும்.

- Advertisement -

அந்த குழந்தை பிறந்த பிறகும் கூட எதிர்காலத்தில் நல்லபடியாக வளர்ந்து இந்த சமுதாயத்திற்கு நன்மையை செய்யக்கூடிய மனிதனாக வளரும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உண்மையான பக்தியோடு கருவுற்றிருக்கும் தாய் இந்த பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும். ஓம் பிரணவ மந்திரத்திற்கு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

இதையும் படிக்கலாமே: பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

உங்கள் குழந்தை இந்த நாமத்தை தாங்கி பிறக்கப் போகின்றது. உங்களுடைய குழந்தையின் தலையெழுத்து மோசமாக இருந்தாலும் சரி, ஜாதக கட்டத்தில் பிரச்சனை வரவேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டு இருந்தாலும் சரி, அதை எல்லாம் கருவிலேயே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம் இது. அந்த காலத்திலேயே முன்னோர்கள் சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். இந்த பரிகாரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியடைந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -