பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

cash4
- Advertisement -

வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் வரும். தொழில் செய்பவர்களுக்கு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வருமானம் இருக்கும். நீங்க என்ன செய்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் தினம் தினம் பணத்திற்கு பஞ்சம் இருக்கக் கூடாது. வருமானம் ஏதாவது ஒரு வகையில் வீட்டிற்குள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து, மாதத்தின் முதல் நாள் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்.

அந்த மாதம் முழுவதும் நீங்கள் செல்வதற்காக வாழலாம். நாளை, ஆங்கில மாதம் பிறக்கவிருக்கின்றது. நாளைக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். தமிழ் மாதம் பிறக்கும் அல்லவா அந்த முதல் தேதியிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

மாதம் முழுவதும் செல்வந்தராக வாழ பரிகாரம்

மாதத்தில் முதல் நாள் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நிலை வாசலில் கோலம் போட்டு விடுங்கள். பிறகு பட்டை எடுத்துக் கொள்ளவும். நம்முடைய எல்லோர் வீட்டு சமையலறையிலும் இந்த பட்டை இருக்கும். அதை எடுத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். இந்தப் பட்டையை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் பட்டை பொடி உங்களுக்கு கிடைத்துவிடும். பிரியாணிக்கு போடக்கூடிய பட்டை தான்.

நிலை வாசலுக்கு வெளியில் செல்லவும். வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 500 ரூபாய் நோட்டாக இருந்தால் ரொம்ப நல்லது, கையில் 500 ரூபாய் இல்லை என்பவர்கள், 100 ரூபாய், 200 ரூபாய், நோட்டை வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தப்பு கிடையாது. 10 ரூபாய் நோட்டு இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

தவறு கிடையாது. அந்த ரூபாய் நோட்டின் மேலே இந்த பட்டை பொடியை அரை ஸ்பூன் வச்சிக்கிட்டு, அப்படியே மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த மாதம் முழுவதும் எனக்கு வருமானம் இருக்கும். நான் செல்வந்தராக வாழ்வேன். தினம் தினம் பண மழையில் நனைவேன். என்று பாசிட்டிவ் ஆக நினைத்து, நிலை வாசலுக்கு வெளியில் வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு நின்று, இந்த பொடியை அப்படியே ஊதி விடுங்கள்.

பொடி நிலை வாசலுக்கு உள்பக்கம் பரவி விடும். அவ்வளவுதான் வீட்டிற்கு உள்ளே வந்து விட்டு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம். அந்த பணத்தை மடித்து பாக்கெட்ல வச்சுக்கோங்க செலவு பண்ண பயன்படுத்திக்கோங்க. இந்த பட்டை பொடி பறந்து எப்படி உங்க வீட்டுக்குள் வந்ததோ அதேபோல பணம் உங்க வீட்டுக்குள் தினம் தினம் வரும்.

- Advertisement -

இதுதாங்க பரிகாரம். மாதத்தில் முதல் நாள் நீங்கள் நம்பிக்கையோடு இதை செய்தால் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். நம்பிக்கை இல்லாமல் செய்யாதிங்க. நிச்சயம் அதற்கான பலன் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இதை செய்யலாம். கணவருக்காக மனைவி செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை பெருக்கும் குபேரர் வழிபாடு

கணவர் தனக்காக தானே செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் மாதம் முழுவதும் பண மழையில் நனைய இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -