ஏளனப்படுத்தியவர்கள் முன்பாக விஸ்வரூபமான வெற்றியை அடைந்தது அவர்கள் முகத்தில் கரியை பூச செவ்வாய்க்கிழமை இரவு இந்த பொருளை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றுங்கள்.

karpooram
- Advertisement -

அனைவரும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்து இருப்போம். அந்த அவமானங்கள் நம்முடைய வாழ்க்கையை மிகவும் பாதித்திருக்கும். நம்முடைய உருவத்தை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ, வேலையை வைத்தோ, எதுவாக இருந்தாலும் அதை காரணமாக வைத்து மற்றவர்கள் முன்பு நம்மை அவமானப்படுத்தி இருப்பார்கள். அந்த அவமானத்தை நாம் சந்திக்கும் போது இவர்கள் முன்பாக நாம் உயர்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்து இருப்போம். அப்படி நினைத்து இருப்பவர்கள் எந்த பொருளை கற்பூரத்துடன் வைத்து ஏற்றும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மானம், மரியாதை என்பது நம் தமிழர்களின் உயிராகவே மதித்து வாழ்கிறோம். அந்த மானத்திற்கும் மரியாதைக்கும் அவமானம் ஏற்படும் பொழுது அதனால் நாம் தலைகுனிய நேரிடும். நம்முடைய செயலால் இந்த அவமானங்கள் ஏற்பட்டால் அதற்கு நாமே பொறுப்பு. ஆனால் நம்மிடம் இருக்கக் கூடிய விஷயங்களை வைத்து நம்மை அவமானப்படுத்தினால் அந்த அவமானத்தை நாம் ஒரு படி கட்டாக நினைத்து அதன் மேல் ஏறி நடந்து முன்னேறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் நம்மை அவமானப்படுத்தியவர்களின் முகத்தில் கரியை பூச முடியும்.

- Advertisement -

அப்படி கரியை பூச இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமையில் செய்ய வேண்டும். அதுவும் இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள் மிளகு. ஒரு தட்டில் ஒன்பது மிளகுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கிழக்கு முகமாக பார்த்து அமர்ந்து நம்முடைய இடது கையில் நடுவிரலியும் கட்டை விரலையும் பயன்படுத்தி ஒரு மிளகை எடுத்து அதை மூன்று முறை அந்த இரண்டு விரல்களால் உருட்ட வேண்டும். பிறகு அந்த மிளகை வலது கையில் போட்டு விட வேண்டும்.

மிளகை உருட்டும் பொழுது நம்மை அவமானப்படுத்தியவர்கள் யார், எதற்காக அவமானப்படுத்தினார்கள், அவர்களின் முன்பாக நாம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு உருட்ட வேண்டும். இவ்வாறு ஒன்பது மிளகுகளை உருட்டி வலது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் மிளகை வைத்திருக்கும்போது கையை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும் திறந்து வைத்திருக்கக் கூடாது.

- Advertisement -

பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கற்பூரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கற்பூரத்துடன் நாம் வலது கையில் வைத்திருக்கும் மிளகுகளை போட வேண்டும். அவ்வாறு போடும்பொழுதும் கைகளை மூடிய வண்ணம் தான் போட வேண்டும். அதாவது நாம் தம்ஸ்அப் காட்டும் பொழுது எப்படி கைகளை மூடி வைத்திருப்போமோ அப்படி வைத்துக் கொண்டு மிளகுகளை அகலில் போட வேண்டும். பிறகு கற்பூரத்தை ஏற்ற வேண்டும். கற்பூரம் எரிய ஆரம்பித்த பிறகு அதை எடுத்து வீட்டிற்கு வெளியில் கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து 9 வாரங்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் செவ்வாய்க்கிழமை தான் செய்ய வேண்டும். அதேபோல் யார் அவமானப்படுத்தினார்கள் என்று நினைக்கிறோமோ அதை மட்டும் தான் ஒன்பது வாரமும் நாம் நினைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மிளகு எந்த காரணத்தைக் கொண்டும் கீழே விழுகாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தவறி விழுந்துவிட்டால் அந்த வாரம் அந்த பரிகாரத்தை செய்யாமல் அடுத்த வாரம் பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களை தேடி வர இந்த படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் போதும். வீடு நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக எளிய பரிகாரம்.

இவ்வாறு நாம் செய்து வருவதன் மூலம் நம்முடைய அவமானப்படுத்தியவர்களுக்கு எதிரான நம்முடைய அபார வெற்றியை நாம் பெறுவதற்கு நமக்கு நல்ல வழிகள் பிறக்கும். கூடிய விரைவிலேயே நம்முடைய வெற்றியின் உச்சத்தை நம்மால் அடைய முடியும்.

- Advertisement -