சொந்தமாக வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களை தேடி வர இந்த படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் போதும். வீடு நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக எளிய பரிகாரம்.

murugan perumal patham
- Advertisement -

சொந்தமாக வீடு நிலமும் வாங்க வேண்டும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தினருக்கு வாழ்நாள் லட்சியமாகவே இருக்கிறது. எப்படியேனும் ஒரு சிறிய வீட்டையாவது கட்டில் அதில் வாழ்ந்து விட வேண்டும் என்று ஏங்குபவர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படியானவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது சொந்தமாக நிலமும் வீடும் வாங்கி அதில் குடியேறக் கூடிய வாய்ப்பினை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக வீடு நிலம் அமைய வழிபாடு
வீடு நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக வேண்டுமெனில் நமக்கு அங்கார காரகனின் அருள் நிச்சயம் தேவை. அந்த கிரகத்திற்குரிய அதிபதியான தெய்வம் எனில் அவர் முருகப்பெருமான். ஆகையால் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் வணங்கினாலே இது போன்ற பிரச்சனைகள் சரியாகும் என்பது பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அது எப்படி எந்த படத்தை வைத்து என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்தப் பரிகாரத்தை செய்ய திருச்செந்தூர் முருகனின் திருவுருவப்படத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மாலையை உங்கள் கைகளாலே தொடுத்து முருகர் படத்திற்கு அணிவித்து உங்களால் முடிந்த சிறிய நெய்வேத்தியத்தை படைத்து ஒரு சிறிய வழிபாடை செய்து விடுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு நிலம் இருப்பின் அது ஏதேனும் பிரச்சனையாக இருந்தால் அது சரியாக வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள் அல்லது வாங்க வேண்டும் எனில் அதையும் மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு நிலம் வீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி வாங்கக் கூடிய யோகமும் தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைவிட இன்னும் அதிக பலனைத் தரக்கூடிய வழிபாடுகளில் அது திருச்செந்தூர் முருகர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது. ஆனால் இது அனைவராலும் செய்ய முடியாது என்ற காரணத்தினால் தான் வீட்டில் முருகர் படத்தை வைத்து வழிபாடு செய்ய சொல்லப்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் செல்ல வாய்ப்புள்ளவர்கள் நிச்சயம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது மேலும் அதிகமான பலனை கொடுக்கும்.

- Advertisement -

இத்துடன் ஏகாதிசி திதி வரும் நாளில் பெருமாளுடைய பாதத்தை நாமே ஒரு பேப்பர் அல்லது அட்டையில் வரைந்து அதை பூஜை அறையில் வைத்து அந்த திதி முழுமையாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்து வரும் போதும். இந்த பிரச்சனைகள் கூடிய விரைவில் சரியாகி சொந்த வீட்டில் வாழ்வதற்கான யோகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி நிலம் வீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அல்லது அதன் தொடர்பான வழக்குகள் இருந்தாலும் அவையெல்லாம் கூட சரியாக விடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் அருளை முழுமையாக பெற சங்கு தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றி பாருங்கள். எட்டு திக்கிலும் இருந்து பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

இந்த இரண்டு படங்களை உங்கள் வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபடும் பொழுது நிச்சயமாக உங்களின் நிலம் வீடு பிரச்சனை சரியாகி சொந்தமாக வாங்கி அதில் குடியேறக் கூடிய யோகம் அமையப் பெறும். ஆகையால் இந்த வழிபாட்டோடு உங்கள் உடைய முயற்சிகளையும் தொடர்ந்து செய்து முன்னேறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -