கார்த்திகை தீபத்தன்று பழைய அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா? கூடாதா? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? கார்த்திகை தீப ஸ்பெஷல்!

karthigai-deepam-agal
- Advertisement -

கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானின் ஜோதி வடிவத்தை வழிபடுவதே ஆகும். நெருப்பு ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையில் விசேஷமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அது போல் வீடுகளிலும் நாம் கார்த்திகை தீபம் அன்று நிறைய விளக்குகள் ஏற்றி ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையாரை நினைத்து வாழ்வில் இருக்கும் இருள் என்கிற இன்னல்கள் நீங்கி, ஒளி என்கிற ஜோதியை பெறுவதற்காகவே இந்நாளை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். கார்த்திகை தீபம் அன்று ஏற்றக் கூடிய விளக்குகளில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே இப்பதிவு.

கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்கி புதிய ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை. திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆனது நிச்சயம் திருப்பத்தை தரும். வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்திப்பவர்கள் உங்கள் வீட்டை சுற்றி நிறைய அகல் தீபங்களை ஏற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

கார்த்திகை தீபத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?
பொதுவாக கார்த்திகை தீபம் அன்று 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது என்பது பொருளாகும். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தது ஒன்பது தீபங்களை ஏற்றலாம். நீங்கள் ஏற்றும் விளக்கு ஒற்றைப்படையில் இருப்பது சிறப்பு.

deepam8

பழைய அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா?
கார்த்திகை தீபம் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நீங்கள் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் விரிசல்கள் இருந்தால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும். ஒவ்வொரு கார்த்திகை தீபம் அன்று தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம் தவறில்லை.

- Advertisement -

கார்த்திகை தீபம் எப்படி ஏற்றுவது?
தயாராக இருக்கும் அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தவிர வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த வேண்டாம். நம்முடைய வருடத்தில் ஒரு நாள் தான் இந்த தீபங்களை ஏற்ற போகிறோம். நம்முடைய உண்மையான பக்தியை முன் வைத்து வேண்டுதல்கள் வைத்தால் நிச்சயம் அது பலிக்கும். அவற்றில் எந்த குறையும் வைக்க வேண்டாம்.

karthigai-deepam1

பின்னர் கணமான திரிகளைப் போட்டு முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். எல்லா தீபங்களும் தீக்குச்சியை பயன்படுத்தி ஏற்றாதீர்கள். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.

- Advertisement -

karthigai-deepam2

எங்கெல்லாம் தீபம் வைக்கலாம்?
வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். பால்கனி, வராண்டா, மாடிப்படிகள், கோலம் போட்டிருக்கும் இடத்தில் கூட அழகாக வைப்பார்கள். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வையுங்கள். இவைகள் மஹாலக்ஷ்மி அம்சம் கொண்டவை.

இதையும் படிக்கலாமே
பணவரவு தரும் இந்த மஞ்சளுக்கு இருக்கும் மகிமைகள் கேட்டால் நீங்களே வியந்து போவீர்கள்! அப்படி என்ன மஞ்சள் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -