கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

shivan
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானுக்கு சிறப்பு வாய்ந்த மாதம். அந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக் கூடிய தேய்பிறை பிரதோஷத்தன்று, சிவனை வழிபாடு செய்தால் கோடி பலன் கிட்டும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. நாளைய தினம் பிரதோஷ நாளில் யார் யாரெல்லாம் கட்டாயமாக  சிவபெருமானின் வழிபாட்டை செய்ய வேண்டும், எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாளைய தினம் பிரதோஷ வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம், என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

இந்த கார்த்திகை மாத பிரதோஷத்தை ஆதி பிரதோஷம் என்று சொல்லுவார்கள். அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பிரதோஷம் வந்திருக்கிறது. ஆதி என்பது சூரிய பகவானை குறிக்கின்றது. ஆகவே சூரிய திசை நடப்பவர்கள், நல்ல வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், இந்த கார்த்திகை மாத பிரதோஷத்தில் சிவபெருமானின் வழிபாடு செய்தால் உங்களுக்கு, சூரிய பகவானின் ஆசிர்வாதம் கிடைத்து நல்லது நடக்கும்.

- Advertisement -

நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்.  இருக்கின்ற வேலையில் மன நிம்மதி இல்லாமல் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் நாளைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்யலாம். சிவபெருமானுக்கு உங்கள் கையால் இளநீர் வாங்கி கொடுத்த அபிஷேகம் செய்து பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யுங்கள். வேலையில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அடுத்தபடியாக ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியிலிருந்து 6.00 மணி பிரதோஷ நேரம். ஞாயிற்றுக்கிழமை இந்த நேரம் தான் ராகு கால நேரமும் நமக்கு வரும். ஆகவே ராகு திசை நடப்பவர்கள், ராகு பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

ஆரோக்கியத்தில் பிரச்சனை திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்பவர்கள் எல்லாம் பசும்பாலை உங்கள் கைகளால் நாளைய தினம் சிவபெருமானுக்கு வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு நிச்சயம் விமோசனம் கிடைக்கும்.

அடுத்ததாக இன்று நாம் எல்லோருக்கும் இருக்க கூடிய பிரச்சனை கடன் பிரச்சனை. உலகை ஆளும் ஈசனே எனக்கு ஒரு வழியை காட்டு என்று சொல்லி சிவபெருமானுக்கு உங்கள் கையால் வில்வ இலை மாலை கட்டி கொடுத்து அபிஷேகத்திற்கு பச்சரிசி மாவு வாங்கி கொடுங்கள். உங்கள் கடன் பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடும்.

- Advertisement -

இப்படி எல்லாம் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும்தான் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டுமா. இந்த பூமியில் பிறந்த புழு பூச்சி முதல் மனித உயிரினங்கள் வரை நாளைய தினம் பிரதோஷ தினத்தில், பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு முத்தி கிடைக்கும். சிவபெருமானின் பாதங்களில் இடம் கிடைக்கும்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பான மன நிறைவான நல்ல வாழ்க்கையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் சிவபெருமானின் வழிபாட்டை யாரும் தவற விடாதீங்க.

இதையும் படிக்கலாமே: குடிசையில் இருப்பவனை கோபுரத்துக்கு எடுத்துச் செல்லும் குபேர வழிபாடு

கோவிலுக்கு செல்லவே முடியாது என்பவர்கள் கூட நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சிவபெருமானின் வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களுக்கு அந்த எம்பெருமானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -