கார்த்திகை மாத மகாவிஷ்ணு வழிபாடு

vishnu
- Advertisement -

கார்த்திகை மாதத்தை ஹரிஹர மாதம் என்று சொல்லுவார்கள். கார்த்திகை மாதம் சிவபெருமானையும் கும்பிடலாம். மகாவிஷ்ணுவையும் கும்பிடலாம். நாராயணனை வழிபாடு செய்பவர்கள் கார்த்திகை மாதம் முழுவதும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.

வீட்டில் செல்வ வளம் பெருகும். அந்த மகாலட்சுமி மகாவிஷ்ணுவின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற, இந்த கார்த்திகை மாதம் செய்ய வேண்டிய மகாவிஷ்ணு வழிபாட்டை பற்றி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கார்த்திகை மாதம் மகாவிஷ்ணு வழிபாடு

கார்த்திகை மாதத்தில் தான் துவாதிசி திதியில் மகாவிஷ்ணு, துளசி தேவியை மணமுடித்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீடுகளில் துளசி செடி வைத்திருந்தால் தினமும் அந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, துளசி தாயை வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தேவையான தண்ணீரில் கொஞ்சமாக ஒரு ஸ்பூன் பால் விட்டு, அந்த பால் கலந்த தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றி, குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்பது நம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல் திருமணமாகாத பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கார்த்திகை மாதம் முழுவதும் விஷ்ணு பகவானுக்கு துளசியால் அர்ச்சனை செய்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம். தினமும் சிறிதளவு துளசியை வாங்கிக்கோங்க.

- Advertisement -

பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாள் படத்திற்கோ அல்லது விஷ்ணு பகவான் படத்திற்கோ அல்லது கிருஷ்ண பரமாத்மா படத்திற்கோ இந்த துளசி இலைகளால் அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி, குடும்பம் சீரும் சிறப்புமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பெண்கள் பிரார்த்தனை வைத்தால், அந்த வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறும்.

அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலத்தையும் அந்த விஷ்ணு பகவான் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார். இந்த கார்த்திகை மாதம் முழுவதும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விஷ்ணு கோவிலுக்கு அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலைகளை வாங்கிக் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வாழ்க்கையில் நிறைய தொல்லைகளை, சில பேர் அனுபவித்து வருவார்கள். அது எதிரி தொல்லைகளாக இருக்கலாம் அல்லது நண்பர்கள் தொல்லையாக இருக்கலாம் அல்லது உறவினர்கள் தொல்லையாக இருக்கலாம். சில பேருக்கு வீட்டில் இருப்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த தொல்லைகளிலிருந்து விடுபட இந்த மாதத்தில் ஒரு முறை நரசிம்மரை போய் வழிபாடு செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா தொல்லையையும் அவர் தீர்த்து வைத்துவிடுவார். கார்த்திகை மாத நரசிம்மர் வழிபாடு உங்களை எதிரிகள் தொல்லையிலிருந்து காக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தன தேவதை தங்க வழிபாடு

மேலே சொன்ன இந்த பெருமாள் வழிபாடு எல்லாம் கார்த்திகை மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -