நாளை அதிஅற்புத 9/12/2021 கார்த்திகை சஷ்டியில் சொல்ல வேண்டிய அற்புத தமிழ் பாடல்! செவ்வாய் தோறும் இப்பாடலைப் பாடி முருகனை வழிபட்டால் வந்த துன்பம் எல்லாம் பஞ்சாய் பறக்கும்!

murugan-vilakku
- Advertisement -

ஒவ்வொரு சஷ்டி திதியிலும் முருகனை வழிபட்டு வருபவர்களுக்கு எந்தத் துன்பமும் நெருங்காது என்பது நம்பிக்கை. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சஷ்டியில் முருகனை நினைந்து விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய பிரச்சனைகளும் அடியோடு நீங்கும். முருகன் அனுகிரகம் இருந்தால் தீராத துயர் தீரும், பகைவர்கள் பிரச்சனை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், வீடு கட்டும் யோகம் உண்டாகும் இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய கார்த்திகை சஷ்டியில் பாட வேண்டிய அழகிய சக்தி வாய்ந்த தமிழ் பாடல் இதோ உங்களுக்காக! இப்பாடல் நாளை நாள் பற்றிய கவலை இன்றி முருகனை போற்றும் விதமாக புகழப்பட்டுள்ளது.

Murugan kovil

வேல் வேல் முருகா, வேல் முருகா
வேல் வேல் முருகா, வேல் முருகா
வேல் வேல் முருகா, வேல் முருகா
வேல் வேல் முருகா, வேல் முருகா

- Advertisement -

நாளை வருவதை யாரறிவார்?
நன்றே செய்வோம் இன்றைக்கே!
கோளை நம்பி இருப்பாரோ
குகனே உன்னைத் தொழுவோர்கள்!

வேளை நல்ல வேளையென
வேலை செய்வோம் வாருங்கள்!
தோளை வலிமை ஆக்கிநல்
வாழ்வைத் தருவாய் செந்தூரா!

- Advertisement -

வாழ்வே எங்கள் வளரொளியே
வண்ணத் திருமயில் வாகனனே!
வீழ்ந்தவன் எழுந்தேன் உன்னாலே
வெற்றியை நோக்கி ஓடுகிறேன்!

murugan

மூழ்கிய கப்பல் கிளம்பியது
மூழ்கா தினிமேல் ஒருநாளும்!
ஆழ்நல் லறிவுத் தேனமுதை
அளித்தாய் எனக்கே செந்தூரா!

- Advertisement -

அளித்தாய் எனக்கே ஆனந்தம்
ஆற்றல் பெருகிய தய்யாவே
ஒளியும் நலமும் பொங்கியதே!
உன்னை மறந்தால் வாழ்வேது?

ஒளிவும் மறைவும் இல்லாத
ஒளியும் நலமும் பொங்கியதே!
உண்மை வாழ்வே வேண்டுமடா
தெளிவின் தெளிவே இன்பமடா
தினமும் இங்கே செந்தூரா!

தினமும் தினமும் உன்புகழே
திருவாய் மணக்கப் பாடுகிறேன்!
மனமும் உடலும் அதனாலே
மகிழ்வாய் இருக்கக் காணுகிறேன்!

Lord Murugan Vel

கனவும் நனவும் மெய்ப்படுமே
கந்தா உன்அருள் எனக்கிருக்க!
நினைவில் உயிரில் நீ இருக்க
நிதமும் ஒளியே செந்தூரா!

நிதமும் ஒளியின் பாடலடா
நெஞ்சில் இனிமையின் ஆடலடா!
இதந்தரும் சந்தனக் கோலமுகம்
இன்னொளி கூட்டிக் கண்டேனடா!

odhimalai-murugan

சுதந்திரச் சங்கொளி முழங்கிடவே
சுந்தரன் வருவதைப் பாருங்கள்!
விதந்தரு கோடி இன்பமெனும்
விளைந்திட வைத்தாய் செந்தூரா!

விளைவோ அழிவோ அறியேன்நான்
வீணே பொழுதைக் கழிக்காமல்
இளமை தவழும் உன்அழகில்
என்னைக் கொடுத்திட விரும்புகிறேன்!

murugan

அளப்பரும் கருணைப் பெருங்கடலே
அருளே வடிவாய் நிற்கின்ற
ஒளிவளர் விளக்கே பூரணமே
உன்னால் உயர்ந்தேன் செந்தூரா!

உன்னால் வளர்ந்த சிறுவன் நான்
உன்னைப் பாடிக் களிக்கின்றேன்!
மன்னே எந்தன் உயிர்க்குயிரே
மனத்தே ஒலித்திடும் மாமணியே

murugan-silai-abishegam

பொன்னே முத்தே ரத்தினமே!
போற்றிப் போற்றிப் புகழ்ந்தாலும்
என்னால் முடியாதப் பாவுன்
எழிலைக் கூறிடச் செந்தூரா!

எழிலைக் கூறிடச் சொல்தேடி
எங்கே போவேன் ஐயாவே
மொழிக்கோர் அரசே என் தமிழே!
முருகா முருகா பேரறிவே

murugan-vel-thaipoosam

அழியாக் கவிதை நீயானாய்!
அன்பே அருளே உனைக்காண
விழிகள் இரண்டும் போதாதே
வேண்டும் ஆயிரம் செந்தூரா!

வேண்டும் வேண்டும் நீ வேண்டும்
வேலும் மயிலும் வரவேண்டும்!
நீண்ட பொழுதினில் பேரின்பம்
நெடுகத் தந்தால் ஆகாதோ?

யாண்டும் உன்அருள் வேண்டுமென
பாடும் பாட்டொளி கேட்பாயோ?
மீண்டும் மீண்டும் கேட்டாலும்
திகட்டா இசையே செந்தூரா!

திகட்டா தெனக்குத் திகட்டாதே
திருச்செந் தூர்நீர் திகட்டாதே!
அகத்தூள் பொங்கும் கலிப்பதனை
சொன்னால் யாருக்கும் விளங்காதே!

Murugan_ Swamimalai

முகத்தைப் பாருங்கள் பெருநிலவரம்
முழுதும் பாருங்கள் திருஉலகாம்!
இகமும் பரமும் எதுவென்றால்
இதுவே என்பேன் செந்தூரா!

- Advertisement -