பணம் உங்க கையில் இருந்துட்டே இருக்கணும்னு நினைக்கிறவங்க, இந்த பொருளை உடனே வாங்கி வச்சிக்கோங்க.

- Advertisement -

பணத்தை ஈர்க்கும் ஆகர்ஷண சக்தி மிகுந்த பொருள்கள் பல இருந்தாலும், அதில் இந்த ஒரு பொருளுக்கு தனி ஒரு இடம் உண்டு. அந்த ஒரு பொருள் கருமஞ்சள் தான். மஞ்சள் வகையில் அரிதாக கிடைக்கப்படும் இந்த கருமஞ்சள் இப்போது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. இந்த கருமஞ்சளில் காளியும், பைரவரும், வசிக்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகத்தில் ராகுவினால் உண்டாக்கும் தோஷ நிவர்த்திக்கு இந்த கருமஞ்சளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கருமஞ்சள் பணத்தை ஈர்க்கவும், பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவும் உதவுகிறது. இப்போது நாம் எந்தெந்த வகையில் இந்த கருமஞ்சளை பயன்படுத்தினால், நமக்கு பண வரவு தடை இல்லாமல் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

இந்த கருமஞ்சளை ஒரு சிறிய துண்டு எடுத்து உங்கள் மணி பரிசில் வைத்துக் கொண்டால் போதும். பர்சில் பணம் இல்லை என்ற சொல்லையே நீங்கள் இனி கூற முடியாது. அந்த அளவிற்கு இந்த கருமஞ்சள் இருக்கும் இடத்தில் பணம் சேரும்.

- Advertisement -

அடுத்ததாக நீங்கள் தொழில், வியாபாரம் எது செய்து கொண்டு இருந்தாலும், கல்லாப்பெட்டியில் இந்த கருமஞ்சளை ஒரு துண்டு போட்டு வைத்து விடுங்கள். வியாபாரம் பெருகி, பணவரவு தடை இல்லாமல் இருக்கும். வீட்டில் பணம், நகை வைக்கும் இடத்திலும் ஒரு துண்டு வைக்கலாம். கருமஞ்சள் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வாக இருக்கிறது. கருமஞ்சளை இழைத்து நெற்றியில் தினமும் திலகம் இட்டுக் கொண்டால் அத்தனை சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் நீங்கள் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓட்டுபவராக இருந்தாலும் சரி, அல்லது எங்கேனும் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் ஒரு துண்டு கருமஞ்சளை வண்டியில் போட்டு விட்டால் விபத்து ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வாகனத்தை வைத்து தொழில் செய்பவர்களுக்கு வாகனத்தில் இது இருக்கும் போது பண வரவு அதிகமாக கிடைக்கும்.

- Advertisement -

அதே போல் இந்த கருமஞ்சளை உறங்கும் போது இரவில் தலையணை அடியில் ஒரு துண்டு வைத்து உறங்கினால் போதும் கெட்ட கனவுகள் என்பது வரவே வராது. அது மட்டுமின்றி சிலர் தூக்கத்தில் அலறி துடித்து எழுந்து விடுவார்கள். இந்த கரு மஞ்சள் இருக்கும் போது அது போன்று நடக்க வாய்ப்பே இல்லை.

அதே போல் இந்த கரு மஞ்சளை உங்கள் கைகளில் வைத்து தினமும் ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தாலே போதும். உங்கள் உடம்பில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களும் வெளியேறி விடும். இந்த முறை மிகவும் பலன் தர கூடியது.

- Advertisement -

இந்த கருமஞ்சள் செடியை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் நீங்கள் பணத்தை தேடிப் போகவே வேண்டாம் உங்களைத் தேடி அனைத்து செல்வங்களும் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இவற்றை செய்வதால் நடக்கும் விளைவுகள் என்ன தெரியுமா?

இத்தனை சக்தி வாய்ந்த இந்த கருமஞ்சளை உங்கள் வீடு பூஜை அறையில் ஒரு சிறு துண்டாவது வாங்கி வைத்து, தெய்வத்தை வணங்கி தடை இல்லா பண வரவு பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்.

- Advertisement -