உங்க வாழ்க்கை பாவக்காய் போல கசப்பாக தெரிகிறதா? கரும்பு போல இனிப்பாக மாற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இதை செய்தால் உங்கள் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையுமே!

- Advertisement -

எல்லாடைய வாழ்க்கையும் கரும்பு போல தித்திப்பாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. சிலருடைய வாழ்க்கை இங்கு பாகற்காய் போல கசப்புடன் தான் இருந்து வருகிறது. இந்த கசப்பான நிலை மாறி, கரும்பு போல திகட்ட திகட்ட இனிப்பான வாழ்க்கை கிடைக்க நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இந்த பரிகாரம் செய்தால் நம் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையுமா? என்பதை இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிஞ்சிக்குவோம் வாங்க.

பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதை மருந்தாகவே உடல் ஏற்றுக் கொள்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, நம்மை சுத்தமாக வைத்திருக்க செய்கிறது. எனவே பாகற்காய் போல எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், கசப்பான சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தாலும் அதை எல்லாம் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க இருக்கும் இனிப்பான நாட்களுக்கு கொடுக்கும் விலையாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.

- Advertisement -

ஒரு நாளில் 24 மணி நேரமும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒருவரை நீங்கள் பார்க்க முடியுமா? ஏதாவது ஒரு நிமிடமாவது அவர் தன்னுடைய கஷ்டங்களை நினைத்து வருத்தப்படத்தான் செய்வான், இது உலக நியதி ஆகும். துன்பங்களில் உழன்று அதிலேயே மூழ்கி போய்விடாமல் நீச்சல் அடித்து போராடி நீந்தி இன்பத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இப்படி ஒரு இன்பமான சூழ்நிலையை கொடுத்து, நமக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தரக்கூடிய இந்த ஒரு எளிய பரிகாரம் புதன் கிழமைகளில் செய்வது விசேஷமானது.

ஒவ்வொரு புதன்கிழமையிலும் விஷ்ணு பகவானுக்கு கரும்புச்சாறு படைப்பவர்களுக்கு கரும்பு போன வாழ்க்கை அமையும் என்பது சாஸ்திர நம்பிக்கையாக இருந்த வருகிறது. எனவே புதன்கிழமைகளில் பூஜை அறை முழுவதையும் சுத்தம் செய்து விஷ்ணு படம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் விஷ்ணு அவதாரம் பெற்ற எல்லா படமும் ஒன்றுதான். எனவே விஷ்ணு படம் இல்லை என்று வருத்தப்பட வேண்டாம். பெருமாள் இருந்தாலும் அவரும் விஷ்ணு தானே! விஷ்ணு படத்திற்கு முன்பு ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சில துளசி இலைகளை போட்டு வையுங்கள், இது புனித தீர்த்தமாகும்.

- Advertisement -

பின்பு ஒரு வெண்கலம் அல்லது செம்பினால் ஆன பாத்திரம் ஒன்றில் கரும்புச்சாற்றை ஊற்றி வையுங்கள். பின்பு நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல் அல்லது உங்களிடம் இருக்கும் உலர் திராட்சை, பேரீச்சை, உடைத்த கடலை, கற்கண்டு போன்றவற்றையும் வைக்கலாம். இரண்டு புறமும் இரு அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த படத்திற்கு மாலை சாற்றி பூக்களை தூவி பகவானுக்கு உரிய மந்திரங்களை உங்களுக்கு தெரிந்த வரை உச்சரிக்க வேண்டும். பிறகு தூப, தீபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். பின்பு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு பூஜை அறையில் இருக்கக்கூடிய கரும்பு சாற்றை எடுத்து அருகம்புல், மாவிலை அல்லது ஸ்பூன் போன்ற ஏதாவது ஒன்றை வைத்து சிறிதளவு எடுத்து படத்தின் மீது தெளித்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
5/2/2023 சக்தி வாய்ந்த தைப்பூசம்! முருகனுக்கு உகந்த இந்த தைப்பூசத்தில் நினைத்ததெல்லாம் நிறைவேற விரதம் இருந்து வழிபடுவது எப்படி? விரத பலன்கள் என்னென்ன?

பின்பு பாத்திரத்தில் இருக்கும் கரும்பு சாற்றை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக கொடுங்கள். இது போல தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் செய்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் கரும்பு போல தித்திப்பான வாழ்க்கை அமையும். எதிர்பார்ப்பது நிறைவேறும், வேண்டிய வரும் வேண்டிய படி கிடைக்கும் என்பது சூட்சமமான பரிகாரமாகும்.

- Advertisement -