கருநாக்கு உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா? பலிக்காதா? கருநாக்கு உள்ளவர்கள் யாராவது உங்களை திட்டி விட்டால், முதலில் இதை செய்து விடுங்கள். பிரச்சனை எதுவும் வராது.

nakku1
- Advertisement -

பொதுவாக கருநாக்கு உள்ளவர்களை பார்த்தாலே நாம் கொஞ்சம் பயப்படுவோம். அவர்கள் நம்மை ஏதாவது திட்டி விட்டால் அது பலித்து விடுமோ என்ற எண்ணம் நமக்குள் இருக்கும். உண்மையிலேயே கருநாக்கு உள்ளவர்கள் கொடுக்கும் சாபம் பலிக்குமா. பலிக்காதா? இப்படி கருநாக்கு உள்ளவர்கள் நம்மை ஏதாவது திட்டி விட்டால் அந்த சாபத்திலிருந்து தப்பிக்க நாம் என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய ஒரு ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுக்கு கருநாக்கு உள்ளதா. நீங்கள் அடிக்கடி கோபப்பட்டு யாரையாவது திட்டி சாபம் கொடுத்து விடுகிறீர்களா. பிறகு கோபம் தணிந்த உடன் எதற்காக இப்படி செய்தோம் என்று வருத்தப்படுகிறீர்களா. நீங்கள் விட்ட சாபத்தால், பாதிக்கப்பட்டவர்களை நினைத்து நீங்களே வருத்தப்படுகிறீர்களா. உங்களுடைய முன்கோபத்தை குறைக்க, உங்கள் வாயால் அடுத்தவர்களுக்கு விடும் சாபம் பலிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கருநாக்கு உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
கருநாக்கு உள்ளவர்கள் தங்களுடைய முன்கோபத்தை குறைக்க வேண்டும். தன்னுடைய நாக்கிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகள் அடுத்தவர்களுக்கு பிரச்சனை கொடுக்கக் கூடாது என்று நினைத்தால், நீங்கள் அடிக்கடி உங்களுடைய வாயால் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி சொல்வதன் மூலம் உங்களுடைய முன்கோபம் தானாக குறையும். அனாவசியமாக அடுத்தவர்களை திட்டி சாபம் கொடுக்க மாட்டீங்க. அப்படியே திட்டி சாபம் கொடுத்தாலும் அந்த வார்த்தை பலிதமாகாது. (கருநாக்கு இல்லாமல் முன்கோபப்படுபவர்களும் இதை செய்யலாம். நீங்கள் சாந்தமானவர்களாக மாறிவிடுவீர்கள். பிறகு நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையவும் இந்த ஒரு மந்திரம் உதவியாக இருக்கும்).

- Advertisement -

கருநாக்கு உள்ளவர்கள் விட்ட சாபம் பலிக்காமல் இருக்க:
பொதுவாகவே சாபம் என்றால் எல்லோர் விட்ட சாபமும் பலிக்காதுங்க. உண்மையிலேயே நீங்கள் ஒருவருக்கு தீங்கு இழைத்து விட்டீர்கள், நீங்கள் செய்த தவறால் அவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் மனம் நொந்து எதிராளி உங்களுக்கு சாபம் கொடுத்தால் மட்டும் அந்த சாபம் பலிக்குமே தவிர, நீங்கள் செய்யாத தவறுக்கு யாரேனும் உங்களை வயிறு எரிந்து திட்டினாலோ அல்லது சாபம் கொடுத்தாலோ அது பலிக்காது. இதே தான் கருநாக்கு உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

கருநாக்கு உள்ளவர்கள் உங்களை திட்டிவிட்டார்கள். அந்த சாபத்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் உங்களுக்குள் இருந்தால் இதை மட்டும் செய்யுங்கள் போதும். நாட்டு மருந்து கடையில் பஞ்சகவ்வியம், கோமியம் இந்த இரண்டு பொருட்களும் கிடைக்கும். இதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நம் அனைத்து கஷ்டங்கள் தீரவும், வேண்டுதல்களுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கவும் நந்தி தேவரை இப்படி தான் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை மட்டும் செய்தால் கை மேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் கொஞ்சமாக கலந்து கொள்ளவும். இதோடு மஞ்சள் தூள் சிரிதளவு, கல் உப்பு சிறிதளவு, போட்டு கரைத்து தலைக்கு குளித்து விட்டால் போதும். கருணாக்கு உள்ளவர்கள் திட்டி விட்ட சாபம் உங்களை தாக்காமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான பரிகாரம் தான். மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -