தேங்காய் எண்ணெயோடு இந்த 2 பொருட்களை மட்டும் சேர்த்து தலையில் தேய்த்துப் பாருங்கள். 2 மாதத்தில் தலை முடி கருகருவென அடர்த்தியாக கால் வரை வளர்ந்து நிற்கும்.

hair17
- Advertisement -

தலைமுடி நன்றாக அடர்த்தியாக கருமையாக வளர வேண்டும். ஆனால், தலைமுடிக்கு கேர் எடுத்து, முடிக்கு ஹேர் பேக் போட்டு, முடியை வளர்ப்பதற்கு நேரம் எல்லாம் கிடையாது என்பவர்களுக்காக ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் தலை சீவுவதற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் தேய்த்து கொண்டால் போதும், தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கிவிடும். அந்த அளவிற்கு சூப்பரான சிம்பிளான செலவில்லாத ஒரு ஹேர் ஆயிலை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

200ml அளவு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். கருஞ்சீரகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி கொள்ளுங்கள். காய்கறி வாங்கும் போது கருவேப்பிலை இலவசமாக கிடைக்கும். அதையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய், கருஞ் சீரகம், கருவேப்பிலை. இந்த 3 பொருட்கள் போதும்.

- Advertisement -

200ml தேங்காய் எண்ணெய்க்கு, 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஒன்றும் இரண்டுமாக இடித்தது, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து முதலில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் காய்வதற்குள் ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்திருக்கும் கருஞ்சீரகத்தையும், அடுத்தபடியாக வெட்டி வைத்திருக்கும் கறிவேப்பிலையையும் சேர்த்து எண்ணெயை நன்றாக காய விடுங்கள். அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும்.

கருஞ்சீரகத்தின் கருப்பு நிறம் தேங்காயெண்ணெயில் இறங்கவேண்டும். கருவேப்பிலையின் சிடசிடப்பு எல்லாம் அடங்கி 5 இலிருந்து 7 நிமிடம் வரை எண்ணெயை காய்ச்சி அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெயை நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியில், வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் 6 மாதம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு எப்படி வைப்பீர்கள் அதேபோல இந்த எண்ணெயை தலையில் வைத்து வந்தாலே போதும். எப்போதும் போல வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாட்கள் நீங்கள் தலைக்குக் குளிக்கலாம். எண்ணெய் வைத்து விட்டு தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

சில பேருக்கு தினமும் தலையில் எண்ணெய் வைக்கக்கூடிய பழக்கம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை நன்றாக தலையில் வைத்து மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த சிம்பிளான சூப்பரான ரெமிடி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -