பத்தே நிமிஷத்துல கருப்பான உங்க பாதங்களை பாலிஷ் பண்ண மாதிரி பளப்பளன்னு மாத்திடலாம். அதுக்கு இதை ஒரே ஒரு முறை யூஸ் பண்ணாலே போதும்.

- Advertisement -

பொதுவாகவே பலரும் முகத்திற்கு காட்டும் அக்கறையில் ஒரு சிறு பங்கை கூட பாதம், கை, கழுத்து போன்ற இடங்களில் இருக்கும் கருமையை அகற்ற அக்கறை காட்டுவதில்லை. அதுவும் இந்த வெயில் காலத்தில் நாம் வெளியில் சென்று வந்தால் பாதங்களில் எல்லாம் செருப்பு தடமே பதிந்து விடும் அளவிற்கு கருத்து போய் விடும். கழுத்து முட்டி எல்லாம் அடர்ந்த கருப்பாகி பார்க்கவே நன்றாக இருக்காது. இந்த கருமையும் நிமிஷத்தில் சரியாக ஒரு அருமையான டிப்ஸை தான் இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பாதங்கள் எப்போதும் அழகாக இருக்க நாம் வெளியில் எங்கு சென்று வந்தாலும் உடனே சோப்பு போட்டு பாதங்களை நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும். ஏனென்றால் உடலின் மற்ற பாகங்களை விட பாதத்தில் தான் அதிக அழுக்கும் தூசும் படிந்திருக்கும். அது மட்டுமின்றி தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து பாதத்தை 10 நிமிடம் அதில் வைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் அழுக்குகள் வெளியேறுவதுடன் பாதம் நல்ல மிருதுவாக வெடிப்புகள் வராமல் இருக்கும்.

- Advertisement -

பட்டுப் போன்ற பாத அழகை பெற:
பாதத்தை பளிச்சென்று மாற்ற முதலில் ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சமையல் சோடாவை எப்போதும் நாம் தனியாக நம்முடைய சருமத்தில் பயன்படுத்தவே கூடாது. அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். சமையல் சோடாவுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதில் சேர்த்திருக்கும் சமையல் சோடா எலுமிச்சை சாறு இரண்டுமே சருமத்தை வறட்சியாக்கக் கூடியது. ஆகையால் இதில் தேங்காய் எண்ணெய் அல்லது உங்களிடம் வேறு எண்ணைகள் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் என எது இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்க்கும் போது சருமம் எண்ணெய் பசையுடன் மிருதுவாக இருக்க உதவி செய்யும்.

- Advertisement -

இப்போது நாம் தயார் செய்த இந்த லிக்விடை கருமை அடைந்த பாதம், கை முட்டி, கால் முட்டி கழுத்து பகுதி போன்ற பகுதிகளில் எல்லாம் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு மேலும் ஒரு இரண்டு நிமிடம் அது அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு ஒரு ஈரத் துணியை வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்படி துடைத்த பிறகு வீட்டில் ஏதேனும் மாஸ்டரைசர் க்ரீம் இருந்தால் லேசாக தடவி விட்டு விடுங்கள். இப்படி ஒரு முறை செய்த உடனே கருமை அடைந்து பாதங்கள் எல்லாம் நிமிடத்தில் பளிச்சென்று மாறி இருக்கும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இந்தக் குறிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இதை எந்த காரணத்திற்கொன்று முகத்தில் நாம் பயன்படுத்தக் கூடாது. கழுத்து கால் முட்டி போன்ற இடத்தில் இருக்கும் தோல் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். முகத்தில் இருக்கும் தோல் அப்படியல்ல எனவே முகத்தில் இதை பயன்படுத்தவே கூடாது இதில் கவனமாக இருங்கள்.

இதையும் படிக்கலாமே: கண் கருவளையத்தால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? ஒரு ஸ்பூன் காபி தூள் இருந்தால் போதும் உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை காணாமல் போக செய்துவிடலாம்.

இந்தக் குறிப்பை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதும் உங்கள் பாதம் எப்போதுமே பளிச்சென்று இருக்கும். இதற்கிடையில் வெளியில் எங்கேனும் செல்வதாக இருந்தாலும் அல்லது சென்று வந்த உடனேயும் இதை செய்து விட்டால், உடனே உங்கள் பாதம் கைகளில் படிந்த கருமைகள் மறைந்து விடும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -