இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு

karuppa-sami
- Advertisement -

நம்பி கொடுத்த பணம் திரும்பவும் வரவே இல்லை. கஷ்டம் என்று வந்து கேட்டார்கள். அந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது. உதவி செய்யலாம் என்று கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். என்று சொல்லுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதே போல தான், சொந்த பந்தங்கள் அங்காளி பங்காளிகள், ஒருவரிடம் இருந்து சொத்தை ஏமாற்றி வாங்கி விடுகிறார்கள். இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களா.

உங்கள் பக்கம் முழு நியாயமும் இருக்கிறது. நீங்கள் அடுத்தவர்களால் ஏமாற்றப்பட்டீர்கள் என்றால், இந்த பரிகாரம் உங்களுக்காக மட்டும் தான். 48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால், உங்களுக்கு உண்டான நியாயம் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் இழந்த பணம் சொத்தை திரும்பவும், அவர்களே அதாவது உங்களை ஏமாற்றியவர்களே, கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து விடுவார்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த கருப்பசாமி பரிகாரம் தான் இது.

- Advertisement -

இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு

கருப்பசாமி காவல் தெய்வம். உக்கிரமான தெய்வம். தப்பு செய்தால் நிச்சயம் தண்டித்து விடும். ஆகவே உங்கள் பக்கம் 100% நியாயம் இருக்கிறது என்றால் மட்டும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். அடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. கருப்பசாமி கோவில், உங்கள் வீட்டு பக்கத்தில் பக்கத்தில் இருந்தால் அந்த கோவிலுக்கு தினமும் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

முடியாது என்பவர்கள் வீட்டிலேயே கருப்பசாமியை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். கருப்பசாமிக்கு ஒரு சின்ன தட்டில் 2 முந்திரி பருப்பு நெய்வேதியமாக வையுங்கள். கருப்பசாமிக்கு உகந்த நெய்வேதியம் இது. இதோடு முக்கனிகளை கருப்பசாமிக்கு நிவேதனம் வைக்கலாம். மா பலா வாழை. மாம்பழமும் பலாப்பழமும் சில சீசனில் மட்டும்தான் கிடைக்கும். அதனால் வெறும் வாழைப்பழம் மட்டும் வைக்கவும்.

- Advertisement -

நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு தான் கருப்பசாமி என்று மனதில் நினைத்துக் கொண்டு, உங்களை யார் ஏமாற்றினார்களோ, அவர்களது பெயரைச் சொல்லி, உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை கருப்பசாமி இடம் முறையிட்டு, அந்த பிரச்சனை தீர வேண்டும். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிடுங்கள். பிறகு ‘ஓம் கருப்பசாமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.

ஒரு சின்ன கற்பூரம் ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையை காலை 6 மணிக்கு முன்பு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் மாலை 6 மணிக்கு பிறகு செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தை நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்.

- Advertisement -

சூரிய உதயத்திற்கு முன்பு, அல்லது சூர்ய அஸ்தமனத்திற்கு பின்பு இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு இரவு தூக்கம் வருவது ரொம்ப கஷ்டம் தான். காசு மட்டும் அல்ல வேறு எந்த வகையில் ஏமாற்றப்பட்டவர்களாலும் இரவு நிம்மதியாக தூங்க முடியாது, தூக்கம் வராது. உங்களால் காலையில் நிச்சயம் இதை செய்ய முடியாது.

இதையும் படிக்கலாமே: தை மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு.

அதனால் மாலை நேரத்தில் செய்து கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு தக்க நியாயம், தக்க சமயத்தில் கிடைக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த எளிமையான வழிபாடு இது. கஷ்டம் உள்ளவர்கள் கருப்பு சாமியின் பாதங்களைச் சரணடையுங்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -