ஏழ்மையை விரட்டி அடிக்கும் ஏலக்காய். ஏழேழு ஜென்மத்துக்கும் பணக்கஷ்டம் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

ellakai
- Advertisement -

ஒரு குடும்பத்தில் இந்த ஏழ்மை நுழைந்து விட்டால், வீட்டை விட்டு சந்தோஷம் வெளியே சென்று விடும். மனநிம்மதியும் வெளியே சென்று விடும். பணம் காசு மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்ல வரவில்லை. ஆனால், வாழ்க்கையில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் காசு இல்லாமல், ஏழ்மையில் வாழ்வது மிக மிகக் கொடுமையான விஷயம். பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் அந்த அளவுக்கு பணக்கஷ்டம் இருக்காது. இருப்பினும் வரக்கூடிய வருமானத்திற்கு மேல் செலவு இருந்தால் அதை சரி கட்ட கடன் வாங்குகின்றோம். கடனை திருப்பி அடைப்பதற்குள் மேலும் மேலும் கடன் வாங்கி முழு கடனாளியாக நிற்கின்றோம். காரணம் தகுதிக்கு மீறிய ஆசை. தகுதிக்கு மீறிய செலவு. வருமானத்தை விட பல மடங்கு வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை.

இவ்வளவு பிரச்சினைகள் வருவதற்கும் காரணம் விதி என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. இவ்வளவு பிரச்சனைகளை சுயநினைவோடு தானே நம் இழுத்து உள்ளே போட்டுக் கொண்டோம். உங்களுடைய வருமானத்திற்கு மீறி கடன் வாங்கி விட்டீர்களா. உங்களுடைய வீட்டிலும் கடன் புகுந்து விட்டதா. வீட்டில் வறுமை பணகஷ்டம் இருக்கிறதா இந்த பதிவு உங்களுக்காக நான்.

- Advertisement -

பணக்கஷ்டத்தை சரி செய்ய என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ, என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டு, இந்த பரிகாரத்தையும் செய்யுங்கள். ஏழ்மை நிலையில் இருந்து உங்களுடைய வாழ்க்கை படிப்படியாக மீட்டு எடுத்து விடலாம்.

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் வாங்க வேண்டிய ஒரு பொருள் பெரிய ஏலக்காய். மளிகை கடையிலேயே இந்த ஏலக்காய் கிடைக்கும். பெரிய ஏலக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். மூன்று பெரிய ஏலக்காய்கள் போதும். அந்த ஏலக்காய்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று புதியதாக வாங்கி, ஒரு பச்சை நிற துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி, பெருமாளின் பாதங்களில் வைத்துவிட்டு, மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி உங்களுக்கு இருக்கும் பணம் கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து, இந்த முடிச்சை அப்படியே பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இந்த முடிச்சை பீரோவில் வைக்கலாம். பர்ஸிலும் வைக்கலாம்.

- Advertisement -

இப்படி இந்த முடிச்சை எந்த இடத்தில் வைத்தாலும் சரி, அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பெருமாளின் ஆசீர்வாதமும் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் கிடைக்க பெற்று உங்களுடைய பண கஷ்டம் படிப்படியாக குறைய தொடங்கும். ஏழ்மை நிலையில் இருந்து சீக்கிரம் வெளி வந்து விடுவீர்கள்.

இன்று இந்த பரிகாரத்தை செய்தால் நாளை கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என்று சொல்லிவிட கிடையாது. இந்த ஏலக்காய் கெட்டுப்போகாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பழைய ஏலக்காய்களை செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, மீண்டும் புதிய ஏலக்காய்களை வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை சம்பாதிப்பதில் உங்களுக்கு தடைகள் வரும் அல்லவா, அதை சரி செய்யவும், பணப்பெட்டியில் வைக்கும் பணம் வீண்விரயம் ஆகாமல் இருக்கவும், சேமிப்பை பல மடங்காக பெருக்குவதற்கும், கடனை சீக்கிரம் அடைக்கவும் இந்த ஏலக்காய் பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -