கருப்பு கயிறு கட்டக் கூடாத ராசிகள்

hand
- Advertisement -

நேற்று இல்லை, இன்று இல்லை, காலம் காலமாக இந்த கருப்பு கயிறு கட்டும் வழக்கம் நம்மிடத்தில் இருந்து வருகிறது. அதிலும் கண்திருஷ்டி படக் கூடாது என்பதற்காக கருப்பு கயிறை கையில் கட்டிக் கொள்வது, காலில் கட்டிக் கொள்வது, கழுத்தில் கட்டிக் கொள்வது போன்ற வழக்கத்தை நம்முடைய இந்து மதத்தினர் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றி வருகிறார்கள்.

அந்த வரிசையில் சில ராசிக்காரர்களுக்கு கருப்பு நிற கயிறு, கருப்பு நிற ஆடை செட் ஆகாது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசினர்கள் என்பதைப் பற்றிய ஜோதிடம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டலாம்

மகரம், துலாம், கும்பம் இந்த மூன்று ராசிகளுக்கும் கருப்பு நிறம் ராசியானது. நீங்கள் கருப்பு கயிறையும் பயன்படுத்தலாம். கருப்பு நிற ஆடைகளையும் நீங்கள் உடுத்தலாம். அது உங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை கொடுக்காது. இந்த மூன்று ராசிகளுக்கு கருப்பு என்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறமாகவே அமையும்.

நிறைய பேர் இன்று கருப்பு நிறத்தை தங்களுடைய ஃபேவரட் கலராக வைத்துள்ளார்கள். முழு கருப்பு நிற ஆடையில் செல்வது அழகு தருவதாகவும் கருதுகிறார்கள். தற்போது இது ஃபேஷன் ஆகவும் இருக்கிறது. இருப்பினும் கருப்பு நிறம் என்பது ஒரு துக்கத்தை குறிக்கின்ற நிறமாகவும், எதிர்ப்பை குறிக்கின்ற நிறமாகவும் நாம் சொல்லப்படுவது உண்டு.

- Advertisement -

ஆகவே திருமணம் காதுகுத்து போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இந்த கருப்பு நிற ஆடையை அணியாமல் தவிர்ப்பது நல்லது. அதேபோல கோவில்களுக்கு செல்லும்போது நல்ல காரியத்திற்கு செல்லும் போது எல்லாம் முழு கருப்பு நிற ஆடையை பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

கருப்பு கயிறு கட்டக் கூடாத ராசிகள்

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டக்கூடாது. கழுத்தில் டாலர் போட, கையில் கருப்பு கயிறு, காலில் கருப்பு கயிறு, திருஷ்டி கழிக்க கூட கருப்பு கயிறு கட்டக்கூடாது. இடுப்பில் கட்டும் அரைஞான் கயிறு கூட சிவப்பு நிறத்தில் நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள். கருப்பு கயிறு பயன்படுத்தாதீங்க. உங்களுக்கு கருப்பு நிற ஆடை அதிர்ஷ்டத்தை கொடுக்காது. ஸ்டைலுக்காக அழகுக்காக கூட கருப்பு நிற ஆடையை நீங்கள் உடுத்த வேண்டாம்.

- Advertisement -

விருச்சகம் மேஷம் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆகவே நீங்கள் கருப்பு நிறத்தை பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு மன குழப்பமான சூழ்நிலை இருக்கும். மன நிம்மதி இல்லாத வாழ்க்கை உங்களை போராட்டத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும் பாத்துக்கோங்க. கருப்பு நிற கையிருக்கு பதிலாக நீங்கள் சிவப்பு நிற கயிறை பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்

மற்ற ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சாதாரணமாக நீங்கள் திருஷ்டிக்காக எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த கருப்பு கயிறை பயன்படுத்தலாம். மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில், பொதுப்படையாக சொல்லப்பட்டுள்ளவை. தவிர இது எந்த வகையிலும் ஒரு தனி நபரின் சொந்த ஜாதகத்துக்கு பொருந்தாது. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -