ஒரே இரவில் கண் கருவளையம் நீங்கி கண்கள் பளப்பளப்பாக மாறி பிரகாசமாக மின்ன பாதாம் பவுடருடன் இதையும் சேர்த்து பேக் போட்டால் போதும்.

kan karuvalaiyam badam powder
- Advertisement -

கண் கருவளையம் பிரச்சினை என்பது இப்போதெல்லாம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இது வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இது மரபு சார்ந்த ஒரு பிரச்சனையாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி கண்களுக்கு அதிகப்படியான வேலை சுமை, இரவில் அதிக நேரம் கண் விழிப்பது, கைப்பேயை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது, சரியான உறக்கம் இல்லாதது, போதுமான அளவு தண்ணீர் உடம்பிற்கு கிடைக்காதது என்பன போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் எந்த காரணங்களால் உங்களுக்கு கருவளையம் ஏற்பட்டிருந்தாலும் இந்த பேக்கை போடும் போது நிச்சயமாக கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைந்து விடும்.

கண் கருவளையம் நீங்க
இந்த கருவளைய பிரச்சனையை போக்க நாம் மூன்று பொருட்களை எடுத்துக் கொள்ள போகிறோம். முதலாவதாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி அதன் சாறை முழுவதுமாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் சேர்த்த பிறகு ரெண்டு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் சேர்த்து நன்றாக குழைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேஸ்டை இரவு உறங்க செல்லும் முன் உங்கள் கண்களைச் சுற்றி கருவளையம் உள்ள இடங்களில் போட்டுவிட்டு அப்படியே உறங்கி விடுங்கள் மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள் போதும். இதை முதல் நாள் போடும் போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். இதை தொடர்ந்து ஒரு வாரம் இதை பயன்படுத்தினாலே உங்கள் கருவளையம் பிரச்சினை நிரந்தரமாக தீர்ந்து விடும்.

உருளைக்கிழங்கில் கருவளையத்தை நீக்கக் கூடிய ப்ளீச்சிங் ஏஜென்ட் உள்ளது. அது போல பாதாம் பவுடர் ஆனது கருவளையத்தை நீக்குவதுடன் சருமத்திற்கு நல்ல ஒரு பளபளப்பை கொடுக்கும். ஆலுவேரா ஜெல் கருவளையம் நீக்குவதை காட்டிலும் கண்களில் கீழ் நீர் கோர்த்து வீக்கம் போல இருக்கும் அந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இயற்கையான இந்த முறையை பயன்படுத்தும் போது எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை நிரந்தரமாக நீக்கி விடலாம்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த கருவளையம் பிரச்சினையை நீக்க இன்னும் சில எளிய வழிமுறைகளும் உள்ளது. இதற்கு விட்டமின் இ ஆயிலை தினமும் இரவில் தேய்த்து வர நாளடைவில் கருவளையம் சரியாகும். இந்த ஆயில் மட்டும் அல்ல ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தொடர்ந்து தேய்க்கும் போதும் கருவளையம் பிரச்சினை நீங்கும் ஆனால் இதற்கு எல்லாம் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இது ஒரு புது ஐடியாவா இருக்கே! வெறும் 2 ரூபாய் பூஸ்டில், 5 நிமிடத்தில் இவ்வளவு அழகாக மருதாணி வைக்க முடியுமா என்ன? தெரிஞ்சு வச்சுக்கலாம். அவசரத்துக்கு உதவும்.

இந்தக் கண் கருவளையத்தை நீக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் கூட, வந்த பிறகு அதை சரி செய்ய முயல்வதை காட்டிலும் வருவதற்கு முன்பே அதை தடுப்பது தான் புத்திசாலித்தனம் கண்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுப்பதுடன் நிம்மதியான தூக்கம் மன அழுத்தம் இல்லாமல் உற்சாகமாக இருந்தாலும் இதுபோல பிரச்சனைகள் வராமலே தடுத்துவிடலாம் இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுக்கு எந்த பிரச்சனை இருப்பின் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -