கண்ணுக்குக் கீழே கருவளையம் மறைய இவ்வளவு ஈசி ஐடியா சமையலறையில் இருக்கும்போது, ஏன் எதை எதையோ தேடி ரொம்ப கஷ்டப்படுறீங்க.

karuvalaiyam
- Advertisement -

உங்களுடைய அழகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்க்க இரண்டு அழகு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நிறைய பேருக்கு வரக்கூடிய பிரச்சனை இது. கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம். இரண்டாவதாக இந்த வெயில் காலத்தில் அடிக்கும் வெயிலுக்கு வெளியே சென்று வந்தால் அப்படியே கருகி கரிகட்டை போல மாறி விடுகின்றோம். சன் டேன் நீக்குவது ரொம்ப ரொம்ப பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்குமே நம்முடைய சமையலறையில் தீர்வு உள்ளது. அந்த எளிமையான தீர்வை, அழகு குறிப்பை இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க:
ஒரு சின்ன கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம், காய்ச்சிய பால் ஊற்றி, அதை அப்படியே 8 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இதை வெளியில் வைத்தால் கெட்டுப் போய்விடும். நைட் முழுவதும் இது பிரிட்ஜில் இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து இந்த வெந்தயத்தையும் ஊறவைத்த பாலையும் அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கண்ணுக்கு கீழே பேக் போட்டுக் கொள்ளவும்.

- Advertisement -

1 மணி நேரம் வரை இந்த பேக் கண்ணுக்குக் கீழே இருக்கலாம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். நீங்கள் இரவு நேரத்தில் இந்த பேக் கண்ணில் போடுவதாக இருந்தால் காலையில் இந்த ஊற வைக்க கூடிய ப்ராசசை செய்ய வேண்டும். ஆனால் கண்ணுக்கு ரொம்பவும் இது குளிர்ச்சி கொடுக்கும். ஆகவே பகல் நேரத்தில் நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றுவது நல்லது.

தொடர்ந்து ஒரு மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம். இரண்டு மாதம் தொடர்ந்து போட்டு வந்தால் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் காணாமலே போய்விடும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

சன் டேன் ரிமூவ் செய்ய அழகு குறிப்பு:
ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி, நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு கோதுமை மாவு 2 ஸ்பூன் போட்டு, தேவையான அளவு பால் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதோடு பாதாம் ஆயில் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து முகம் கழுத்து கை எங்கெல்லாம் டேன் ஆகி இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த பேக்கை போட்டு 20 நிமிடம் நேரம் கழித்து ஸ்கிரப் செய்து குளித்து விடவும். வாரத்தில் இரண்டு நாள் இதை பின்பற்றி வந்தாலே வெயிலினால் உண்டாகும் கருமை நம்முடைய சருமத்தில் நிரந்தரமாக தங்காது.

இதில் கோதுமை மாவுக்கு பதில் அரிசி மாவு சேர்க்கலாம். பாலுக்கு பதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பாதாம் ஆயிலை தவிர்க்க வேண்டாம். சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்க பாதாம் ஆயிலை சேர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: இனி உங்க முகத்திற்கு ஏற்ற சரியான சோப்பைத் தேடி அலைய வேண்டாம். எந்த சோப்பாக இருந்தாலும் அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்கள் முகம் பளிச்சென்று பால் போல பிரகாசமாக மாறி விடும்.

நல்லா அடிக்கின்ற வெயிலில் போகும் போது கூடுமானவரை உங்கள் சருமணத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்வது நல்லது. சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே சென்றால் உங்களுடைய நிறம் கருத்துப் போகத்தான் செய்யும். அது மட்டும் இல்லாமல் வெயில் காலத்தில் நிறைய தண்ணீரை பருகுங்கள். சருமத்தில் ஈரப்பதம் இல்லை என்றாலும் சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -