கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் உடனே மறைய சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் போதுமே! இதை செய்யுங்க கருவளையத்துக்கு குட்பை சொல்லுங்க.

karuvalayam-potato-ghee
- Advertisement -

நம் முக அழகை அதிகரித்து காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சருமம் தான். இயற்கையான பொலிவான சருமம் எப்பொழுதுமே அழகை அதிகரித்து காட்டும். குறிப்பாக நம்முடைய கண்கள் கூர்மையாக கத்தி போல இருந்தால் அழகோ அழகாக நாம் தெரியக்கூடும். அத்தகைய அழகிய விழிகளுக்கு கீழே கருப்பாக வளையம் போல தோன்றுவதை கருவளையம் என்கிறோம்.

இந்த கருவளையம் பெரும்பாலும் உடலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக ஏற்படுகிறது. உடல் வறண்டு போய், கண்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் பொழுது கருவளையம் தோன்றுகிறது. அதிக நேரம் தூக்கம் இல்லாமல் இருந்தாலும், உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்களுக்கும் கருவளையம் உண்டாகிறது. மேலும் உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்து இல்லாவிட்டால் கருவளையம் கண்டிப்பாக வரும். இந்த கருவளையத்தை போக்க கண்ட கண்ட கிரீம் வகைகளை பயன்படுத்தாமல் எளிதாக இயற்கையான பொருட்களை வைத்து எப்படி உடனடியாக விரட்டி அடிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அழகு குறிப்பாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

கருவளையம் மறைய ரொம்பவும் எளிதான வழி ஒன்று உண்டு. தினமும் நீங்கள் இரவு தூங்கப் போகும் பொழுது, உங்களுடைய சமையல் அறையில் இருக்கும் சுத்தமான நெய்யை சிறிதளவு எடுத்து கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையத்தில் தடவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு தூங்க செல்லுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை அலம்பி விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் தானாகவே மறைய ஆரம்பிக்கும்.

பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரை உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். பூ போல துருவி எடுத்து ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்தால் நமக்கு சாறு கிடைக்கும். இதே போல ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளரிக்காய் சாறும் எடுக்க வேண்டும். சுத்தமான வெள்ளரிக்காய் சாறு மற்றும் சுத்தமான உருளைக்கிழங்கு சாறு இந்த இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்க்க வேண்டும். அதே போல ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான கற்றாழை ஜெல்லையும் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது இதை பேஸ்ட் போல அரைத்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை நீங்கள் இரவு தூங்க செல்லும் முன்பு கண்களுக்கு கீழே தடவிக் கொண்டு தூங்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து முகத்தை அலம்பி பாருங்கள். கருவளையம் மாயமாய் மறைந்து இருப்பதை காணலாம்.

இதையும் படிக்கலாமே:
பக்க விளைவுகள் இல்லாமல் வெறும் 10 நிமிடத்தில் வெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற வீட்டிலேயே கருஞ்சீரகம் ஹேர்டை தயார் செய்வது எப்படி?

கற்றாழை ஜெல் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி வறட்சியை போக்கும். உருளைக்கிழங்கு ஜூஸில் இருக்கும் என்சைம் கருவளையத்தை வேரோடு அகற்றி ப்ளீச் செய்துவிடும். வெள்ளரிக்காய் ரத்த கட்டுதலை தடுத்து வீக்கத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் எனவே அந்த இடத்தில் விரைவாகவே பழைய பொலிவை மீட்டு எடுத்து விடலாம். தேன் அழற்ச்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கண்களில் ஏற்படும் அலற்சியை போக்கி, செல்களை புத்துணர்வு பெற செய்யும். இந்த நான்கு பொருட்களும் ஒன்றாக இணையும் பொழுது கருவளையத்திற்கு இனி குட்பை சொல்ல வேண்டியது தான்.

- Advertisement -