பல வருடங்களாக இருக்கும் கருவளையம் கூட சில நாட்களில் மேஜிக் போல மாயமாய் மறைந்து போக என்ன செய்யணும்?

karuvalayam-dark-circle
- Advertisement -

கண்களுக்கு கீழே கருமையான திட்டுக்கள் தோன்றுவதை கருவளையம் என்கிறோம். இது கண்களை மட்டும் அல்லாமல் முக அழகையும் கெடுத்து விடுகிறது. சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு கூட கருவளையம் இருந்தால் ஏதோ சோம்பலுடன் இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்த கருவளையத்தை ஓட ஓட விரட்டி அடிக்க கூடிய எளிய வீட்டு குறிப்பு என்ன? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.

சரியான தூக்கமின்மை காரணமாக கண்டிப்பாக கருவளையம் தோன்றும். சரியான அளவிலான நேரத்திற்கு உறங்க வேண்டும். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது தூங்கி எழ வேண்டும். அப்படி தூங்க முடியாவிட்டால் கண்கள் சோர்வடைகிறது, இதனால் கண்களை சுற்றி இருக்கும் ரத்த ஓட்டம் தடைப்படும்.

- Advertisement -

அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்களுக்கும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட இந்த கருவளையம் தோன்றுகிறது. மேலும் புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். அது மட்டும் அல்லாமல் சரியான அளவிற்கு தண்ணீர் குடிக்காவிட்டாலும், கருவளையம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலில் நன்கு தூங்கி எழ பழகிக் கொள்ளுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுடைய தூக்கத்திற்கு ஒரு சிறு முக்கியத்துவத்தை கொடுத்து வந்தால் கருவளையத்திலிருந்து எளிதாக மீண்டு விடலாம். மேலும் நீங்கள் வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

உங்களுடைய நேரத்தை செட்யூல் செய்து மன இறுக்கம் இல்லாமல் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். தலைக்கு கீழே தலையணை கூடுதலாக வைத்து தூங்குங்கள். கண்களுக்கு கீழே இருக்கும் பிளட் சர்குலேஷன் ரத்த ஓட்டத்தை சரி செய்வதற்கு வெள்ளரிக்காயை வைக்கலாம். அது போல ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட ஸ்பூன் கொண்டு கருவளையத்தின் மீது அழுத்தமாக மெதுவாக ஒத்தடம் கொடுப்பது போல வையுங்கள். இது உப்பி இருக்கும் அந்த இடத்தை சமன் செய்யும்.

- Advertisement -

சிலருக்கு கருவளையம் வந்தால் கண்களுக்கு கீழே உப்பியது போல இருக்கும், ஆனால் சிலருக்கு டொக்கு விழுந்தது போல உள்ளே சென்று இருக்கும். இவர்கள் ஒரு சிறிய பௌலில் உருளைக்கிழங்கு ஜூஸ் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து கண்களுக்கு கீழே கண்களை சுற்றி எல்லா இடங்களிலும் நன்கு தடவி மசாஜ் செய்யுங்கள்.

பத்து நிமிடம் மசாஜ் செய்த பின்பு மீண்டும் சிறிதளவு தடவி 20 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மெதுவாக ஒரு காட்டன் துணியை கொண்டு கண்களை துடைத்து எடுங்கள். இது போல தினமும் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய செய்ய கொஞ்சம் கொஞ்சமாக கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்தில் முடி காடு போல வளரும் அதிசயம் நடக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் இதைத் தான் செய்யணும். நம்ம முடியா இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்குனு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

மேலும் உங்களிடம் டீ பேக்ஸ் இருந்தால் அதையும் நீங்கள் கண்களுக்கு கீழேயும், மேலேயும் சிறிது நேரம் வைத்து எடுக்கலாம். இதில் இருக்கும் கஃபைன் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால் கருவளையம் மறைந்து நல்ல ஒரு ஈவன் டோன் கிடைக்கும். கண்களை சுற்றிலும் மென்மையான தோல் இருப்பதால் தேங்காய் எண்ணெய் அல்லது விட்டமின் ஈ ஆயில் கொண்டு தினமும் மசாஜ் செய்ய வருட கணக்கில் இருக்கும் கருவளையமும் மாயமாய் மேஜிக் போல மறையும்.

- Advertisement -