உங்க வீட்டில் கருவேப்பிலை செடி இருக்கா? அப்படின்னா சமையலறையில் மீந்து போற இதையெல்லாம் இனி தெரியாமல் கூட தூக்கி போடாதீங்க! இந்த செடிக்கு ஊத்துங்க கெமிக்கல் இல்லாத கொத்து கொத்தாக தினசரி தேவைக்கு கருவேப்பிலை கிடைக்கும்.

karuvepilai-mor-rice-water
- Advertisement -

கருவேப்பிலை செடி வீட்டில் இருப்பது ரொம்பவே நல்ல விஷயமாக இருக்கிறது. நாம் அன்றாட பயன்பாட்டுக்கு தேவைப்படக்கூடிய இந்த கருவேப்பிலை செடி சமையலுக்கு ரொம்பவே உபயோகமானது மட்டும் அல்லாமல் தலை முடி வளர்ச்சி, உடல் எடை குறைப்பு, வீட்டு வைத்தியம் போன்றவற்றுக்கும் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. நம்ம வீட்டில் மீந்து போற இந்த சில பொருட்களை கருவேப்பிலை செடிக்கு ஊற்றினால் கருவேப்பிலை செடியில் இருக்கும் குறைபாடுகள் அனைத்தும் நீங்கி கொத்து கொத்தாக இலைகளை துளிர்விடும். இதைப் பற்றிய பயனுள்ள தோட்டக்குறிப்பு தகவல்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

சிலர் கருவேப்பிலையை குச்சியாக நட்டு வைத்திருப்பார்கள். அது அப்படியே இருக்கும், கொஞ்சம் கூட இலை விட்டு இருக்காது. அப்படிப்பட்ட கருவேப்பிலை செடிகள் கூட புதிதாக இலைகளை முளைக்க செய்யக்கூடிய அற்புதமான சத்துக்கள், நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களிலேயே இருக்கிறது. அதில் முக்கியமானது அரிசி கழுவிய தண்ணீர்.

- Advertisement -

அரிசி கழுவிய தண்ணீரை எப்பொழுதும் கீழே அல்லது சிங்கில் ஊற்றி விடாமல் ஒரு சிறிய பக்கெட்டில் சேகரித்துக் கொண்டே வாருங்கள். அது புளித்தாலும் பரவாயில்லை. செடிகளை பொருத்தவரை இது போன்ற விஷயங்கள் புளிப்பு தன்மை அடையும் பொழுது அதில் நுண்ணுயிர்கள் அதிகம் பெருக துவங்கும். இந்த நுண்ணுயிரிகள் தான் செடிகளின் வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஊட்டசத்தை கொடுக்கிறது.

இந்த அரிசி கழுவிய தண்ணீரை போதுமான அளவிற்கு சாதாரண தண்ணீருடன் கலந்து செடி முழுவதும் தெளித்து விடலாம். அதே போல நாம் சமையல் அறையில் புளித்த மோர் இருந்தால் அதையும் கீழே ஊற்றி விடுவோம். நன்கு புளித்த ஒரு கப் மோரை 10 லிட்டர் அளவிற்கு தண்ணீர் உடன் சேர்த்து நீர்க்க கரைத்து எல்லா விதமான செடிகளுக்கும் தாராளமாக பயன்படுத்தி, செடிகளை பசுமையாக நன்கு செழித்து வளர செய்யலாம்.

- Advertisement -

நைட்ரஜன் சத்து அதிகம் தேவைப்படக்கூடிய கருவேப்பிலை செடிக்கு இது போன்ற எளிய உரங்கள், நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கும். புளித்த மோருடன் அரை ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இது இன்னும் எஃபக்டிவ் ஆக கருவேப்பிலை செடியை பெரிய பெரிய இலைகளாக பூக்க செய்யும். கருவேப்பிலை செடியில் முக்கிய பாதிப்பாக இருப்பது இலை சுருட்டல் நோய் மற்றும் பூச்சிகள் தொந்தரவு அதிகம் இருக்கும். வெள்ளை வெள்ளையாக பஞ்சு போல இருக்கக் கூடிய இந்த பூச்சிகளை அவ்வப்பொழுது அகற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
செலவே இல்லாத இந்த உரத்தை ஒரே ஒரு முறை மட்டும் உங்க மல்லி செடிக்கு கொடுத்து பாருங்க, மல்லி செடி நல்லா சரம் சரமா பூக்க ஆரம்பிக்கும்.

நோய் தாக்கிய இலைகளையும் கத்தரித்து விடுங்கள். வேப்பாம் புண்ணாக்கு, வேப்பிலை எண்ணெய் கறிவேப்பிலை செடியில் இருக்கக்கூடிய நோய் தாக்குதல்களை எளிதாக அகற்றும், அதையும் பயன்படுத்தலாம். கடைகளில் வாங்கும் கருவேப்பிலை இலைகள் கெமிக்கல் அதிகம் கலந்ததாக இப்பொழுது இருக்கிறது. நாம் வீட்டில் இப்படி இயற்கையான முறையில் வளர்க்கும் பொழுது கெமிக்கல் இல்லாத கருவேப்பிலை நமக்கு கிடைக்கும். இது அனுதினமும் பயன்படுத்தக்கூடிய பொருள் என்பதால் செயற்கை உரங்களால் பாதிக்கப்பட்ட இலைகளை கூட நாம் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் நன்கு கழுவி அதன் பிறகு பயன்படுத்துவது ரொம்பவே நல்லது.

- Advertisement -