செலவே இல்லாத இந்த உரத்தை ஒரே ஒரு முறை மட்டும் உங்க மல்லி செடிக்கு கொடுத்து பாருங்க, மல்லி செடி நல்லா சரம் சரமா பூக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

எந்த ஒரு செடியுமே வாங்கி வளர்க்கும் போது அது நன்றாக வளர்ந்து காய்களோ, பூக்களோ வைத்து இருந்தால் தான் பார்க்கவும் அழகாக இருக்கும். செடி வளர்க்கும் நமக்கும் மன திருப்தியாக இருக்கும். அப்படி நாம் வைக்கும் செடிகள் எல்லாம் நன்றாக பூக்க வேண்டும் என்றால் வைக்கும் முறையில் இருந்து வளர்க்கும் முறை, உரம் எல்லாமே சரியான வகையில் இருக்க வேண்டும். இந்த மல்லி செடி நல்லப்படியாக பூ வைக்க என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த வீட்டு தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த மல்லி செடியை பொறுத்த வரையில் அதிக வெயில் படும் இடத்தில் தான் வைக்க வேண்டும். அதில் வெயில் எந்த அளவிற்கு படுகிறதோ, அந்த அளவிற்கு அதில் பூக்கள் வைக்கும். செடியில் வெயில் படவில்லை என்றால் செடி வளருமே தவிர பூக்கள் பூக்காது.

- Advertisement -

எந்த ஒரு செடியும் பூவும், காயும் வைத்த பிறகு செடியின் கிளைகளை நறுக்கி விட வேண்டும். அப்போது தான் அடுத்த தளிர்கள் இன்னும் நல்ல சத்தாக வரும். அதில் இருக்கும் பூக்களும் நன்றாக பூக்கும். இந்த முறையை அனைத்து செடிகளுக்கும் செய்ய வேண்டும்.

இப்போது மல்லி செடி நல்ல சரம் சரமாக பூக்க கொடுக்க வேண்டிய உரம் என்னவென்று பார்க்கலாம். இதற்கு ஆவாரம் மரத்தின் பூ, காய், தழை என அனைத்தையுமே எடுத்துக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆவாரம் பூவின் தழைகளை எடுத்து வந்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஆவாரம் பூ விழுதுடன் புளித்த மோரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு பங்கு ஆவாரம் பூ கரைச்சலுக்கு இரண்டு பங்கு புளித்த மோர் என்ற விகிதத்தில் கலந்து வைத்து விடுங்கள். இத்துடன் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வாரம் வரை நன்றாக நொதிக்க விடுங்கள்.

ஒரு வாரம் நன்றாக நொதித்த பிறகு ஒரு லிட்டர் உரத் தண்ணீருக்கு 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை செடிகளின் வேர் பக்கமாக ஊற்றி விட்டால் போதும். இதில் அதிக அளவு நைட்ரஜன் அதிகமாக இருப்பதால், செடிகள் நன்றாக தழைத்து வளரும். பெருங்காயம் செடியில் அதிக பூக்கள் பூக்க உதவி செய்யும். இந்த உரத்தை அடிக்கடி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நீங்கள் குரோமிங் செய்து விட்ட பிறகு இதை கொடுத்தால் போதும். அடுத்து வரும் இலை தழைகள் இருந்து பூக்கள் வரை அனைத்துமே நன்றாக பூக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி வாழைப்பூ வாங்கி சமைச்ச பிறகு, அதோட தோலை கூட தூக்கி தூரப் போடாதீங்க. அதை வச்சு காய்ந்த ரோஜா செடியில் கூட பெரிய, பெரிய பூக்களை பூக்க வைக்கலாம். ஆச்சரியமா இருக்கா வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

இது மிக மிக எளிமையான முறை தான். ஆவாரம் மரம் இருந்தால் அதில் இருந்து தழைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் ஆவாரம் பொடி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் அதை வாங்கி கூட தண்ணீரில் கலந்து இப்படி செடிகளுக்கு கொடுக்கலாம். இந்த உரத்தை ஒரு முறை உண்டு மல்லி செடிக்கு கொடுத்து பாருங்க நல்ல சரண் சரமா பூத்து குலுங்கும்.

- Advertisement -