பிரச்சனைகள் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

vinayaagar achu vellam
- Advertisement -

நாளைய தினம் சனிக்கிழமையில் வரக் கூடிய தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி. இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை எளிமையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து வளமுடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை எப்படி எளிமையாக செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி 

விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாட்களில் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக சொல்லப்படுகிறது. அதுவும் தேய்பிறை சங்கடகர சதுர்த்தி நம்முடைய துன்பங்கள் தேய்ந்து இன்பமாய் வாழ வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் சந்திர பகவான் தான் பெற்ற சாபத்தை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் வழிபட்டார் என்று புராண கதைகள் சொல்கிறது.

- Advertisement -

அப்படியான அந்த நாளில் நாமும் அவரை வணங்கும் போது நம்முடைய துன்பங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் நம்முடைய மனதினை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் சந்திர பகவானுக்கு தான் உண்டு. நம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் காரணம் சந்திர பகவான் தான். அதனால் தான் அவரை மனோகாரகன் என்று சொல்வார்கள்.

அப்படியான மனோகாரகன் வழிபட்ட அந்த தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி நாளில் நாமும் விநாயகரை வணங்கும் போது நமக்கும் அந்த அருள் கிடைக்கும் என்று நம் சொல்லப்படுகிறது. அதிலும் நாளைய தினம் தமிழ் மாதத்தில் முதலில் வரக் கூடிய தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி இந்த தினத்தில் நாம் விநாயகரை வணங்கும் போது சந்திரன் சூரியன் போன்றோரின் அருளையும் சேர்த்தே பெறலாம்.

- Advertisement -

விநாயகரை நாளைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் செய்யலாம். அது அவரவர் உடல் நிலையை பொறுத்து. மாலை நேரத்தில் வீட்டில் மஞ்சளால் சிறிய விநாயகரை பிடித்து வைத்து விடுங்கள். அதே போல் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு நைவேத்தியமாக கொழுக்கட்டை வைத்து வழிபாடு செய்யுங்கள் அல்லது ஒரு துண்டு அச்சு வெல்லம் வைத்தால் கூட போதும்.

இந்த வழிபாடு செய்யும் போது உங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லாம் அல்லது ஓம் கம் கணபதியே நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தாலே போதும். உங்களுடைய அனைத்து தடைகளையும் விநாயகர் தகர்த்தெறிந்து விடுவார். விநாயகருக்கு வைத்து வழிபடும் இந்த நெய்வேத்தியத்தை வீட்டில் அருகில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் விநாயகரே நேரில் வந்து இந்த நெய்வேத்தியத்தை வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கொடி மர வழிபாடு

அத்துடன் நாளைய தினம் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.இது உங்களுடைய அனைத்து பண தடைகளையும் நீக்கும் என்று சொல்லப்படுகிறது. தும்பிக்கை ஆண்டவரை நாளைய தினத்தில் இப்படி எளிமையாக வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் உள்ள சகல துன்பங்களும் தூள் ஆகும். நம்பிக்கையுடன் வழிபட்டால் விநாயகரின் அருளை பரிபூரண பெறலாம்.

- Advertisement -