எல்லா கஷ்டமும் ஒட்டுமொத்தமாக வந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டதா? கஷ்டத்தை துரத்தி விட்டு, எல்லா நல்லதும் வரிசை கட்டிக் கொண்டு வீட்டிற்குள் வர, வரவேற்பறையில் இந்த 1 பொருளை மட்டும் வையுங்கள் போதும்.

sad-thiyanam
- Advertisement -

வெறும் பணகஷ்டம் மட்டும் தான், கஷ்டம் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், பண கஷ்டத்தை எல்லாம் தாண்டி சில பேருக்கு, பல பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த பிரச்சனை யார் ரூபத்தில் வேண்டும் என்றாலும் இருக்கலாம். கணவர் ரூபத்தில் சில பிரச்சனை, பிள்ளைகள் ரூபத்தில் சில பிரச்சனை, உறவுகள் ரூபத்தில் சில பிரச்சனை, செய்யும் வேலை, தொழில், தங்கும் வீடு அக்கம் பக்கம் இருப்பவர்கள் நண்பர்கள் என்று பிரச்சனைக்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றது.

உங்களுடைய குடும்பத்திலும் மேல் சொன்ன பிரச்சனைகளில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தாலும் சரி, அல்லது இதையெல்லாம் தாண்டி உங்களுடைய குடும்பத்தில் புதுசாக ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றாலும் அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்யலாம். பொதுப்படையாக பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய ஆன்மீகம் பரிகாரம் இது.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்:
முதலில் பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் உங்களுடைய வீடு தான். உங்களுடைய வீட்டில் நெகட்டிவ் எனர்ஜியை சுமந்து கொண்டிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி முதலில் வெளியே போடுங்கள். சில பேர் இந்த உடைந்து போன, உதவாத பொருட்களை எல்லாம் அதிர்ஷ்டம் என்று வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். படிக்கட்டுக்கு அடியில், ஸ்லாப்புக்கு மேலே, கட்டிலுக்கு கீழே, அங்கே இங்கே எந்த இடத்தில் எல்லாம் இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் பழைய பொருட்களை மூட்டை கட்டி வைத்திருப்பார்கள்.

ஏற்கனவே பிரச்சினைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றோம். அந்த சூழ்நிலையில் இதையெல்லாம் பார்க்கும் போதே நம்முடைய மனது சோர்வடையத்தான் செய்யும். இது இயல்பான ஒரு விஷயம். ஆனால் நிறைய பேர் இதை புரிந்து கொள்ளாமல் வீட்டை குப்பை தொட்டி ஆக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் வீட்டில் இருப்பவர்களுடைய மனதும் குப்பைத்தொட்டி ஆக இருக்கிறது.

- Advertisement -

முதலில் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை எல்லாம் தூக்கி வெளியில் போடுங்கள். வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் ஒரு கைப்பிடி, ஜாதிக்காய் ஒன்று போட்டுக் கொள்ளுங்கள். இந்த 2 பொருட்களை திறந்தபடி  உங்களுடைய வரவேற்பறையில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைக்கலாம்.

பாசிட்டிவ் எனர்ஜியை அப்படியே பிரபஞ்சத்திலிருந்து ஈத்துக் கொண்டு உங்களுடைய வீட்டில் விடும். உங்களுடைய மனசு லேசாகும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்கும். கிண்ணத்தில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் மூடி போட்டு மூடக்கூடாது. திறந்தபடி தான் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் தூசு அடைந்து விட்டால் இதை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் கொட்டி விட்டு மீண்டும் புதியதாக இரண்டு பொருட்களையும் வாங்கி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

நடக்காத நல்ல காரியத்தை கூட நடத்திக் காட்டக் கூடிய சக்தி இந்த ஜாதிக்காய்க்கு உண்டு. கண் திருஷ்டிகளை துவம்சம்  கொடுக்கக் கூடிய சக்தி வெந்தயத்திற்கு உண்டு. பத்து முறை, ஒரு நல்ல காரியம் நடப்பதற்காக ஒரு இடத்திற்கு போயிட்டு போயிட்டு வரீங்க. ஆனால், அந்த நல்ல காரியம் நடக்கவே மாட்டேங்குது. பதினோராவது முறை செல்லும்போது பாக்கெட்டில் ஒரு ஜாதிக்காயை எடுத்துக்கொண்டு போய் பாருங்கள். நீங்கள் சென்ற காரியம் 100% சக்ஸஸ். ஜாதிக்காய்க்கு அத்தனை பவர்.

இதையும் படிக்கலாமே: பீரோவுக்கு அடியில், நான்கு பக்கத்திலும் இந்த பொருளை வைத்தால் நாளுக்கு நாள் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பஞ்சம், பஞ்சாக பறக்கும்.

சொன்னா நம்ப மாட்டீங்க, ஒரே ஒரு ஜாதிக்காயை கையில் வைத்துக் கொண்டு தினசரி அலுவலகம் சென்று பாருங்கள். தினசரி வேலைக்கு வெளியே சென்று பாருங்கள். உங்களுக்கே ஜாதிக்காய் மகத்துவம் புரியும். பிறகு முழு நம்பிக்கையோடு வரவேற்பு அறையில் வெந்தயத்தையும் சாதிக்காயையும் வைத்து பலன் பெறலாம்.

- Advertisement -