பீரோவுக்கு அடியில், நான்கு பக்கத்திலும் இந்த பொருளை வைத்தால் நாளுக்கு நாள் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பஞ்சம், பஞ்சாக பறக்கும்.

bero-padikaram
- Advertisement -

வீட்டில் இருக்கும் பஞ்சத்தை அடித்து விரட்ட வேண்டும். செலவுக்கு கையில் பணம் இல்லை என்ற பேச்சுக்கு இடமே இருக்கக் கூடாது. அந்த பொருள் வாங்க வேண்டும், இந்த பொருள் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் நிராசையாக போகக்கூடாது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு கையில் பணம் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. கஷ்டப்பட்டு தேவைக்கு ஏற்ப பணத்தை சம்பாதிக்க வேண்டும். இதுதான் முதல் வழி.

கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சம்பாதித்து கொண்டு வந்து பீரோவில் தான் வைக்கின்றோம். ஆனால் வைத்த பணம் எங்க தான் போகுது என்றே தெரியவில்லை. இன்று சம்பாதித்த பணம், நாளை செலவுக்கு கையில் தங்க வில்லை. பணம் பஞ்சு பஞ்சாக பறக்கிறது. பஞ்சம் மட்டும்தான் வீட்டில் இருக்கிறது. இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.

- Advertisement -

பஞ்சத்தை விரட்டியடிக்கும் படிகார பரிகாரம்:
வீட்டில் இருக்கும் பஞ்சத்தை விரட்டி அடிக்க வேண்டும். பீரோவில் பணம் சேர வேண்டும். வீண்விரயம் ஆகக்கூடாது என்றால், பீரோவுக்கு அடியில் நான்கு மூலைகளிலும் நீங்கள் வைக்க வேண்டிய பொருள் படிகார கல். பீரோவுக்கு அடியில் கட்டாயமாக கொஞ்சம் இடம் இருக்கும். கை போகும் அளவுக்கு  பீரோவுக்கு கீழே இடம் இருக்கும் அல்லவா. ஒரு படிகார கல்லை வாங்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, நான்கு துண்டுகளை பீரோவின் நான்கு கால்களிலும் வைக்க வேண்டும். (தரையிலேயே வைக்கலாம்.)

அதாவது நான்கு திசையில் நிற்கக்கூடிய பீரோவுக்கு அடியில், நான்கு பக்கத்தில், நான்கு படிகார கல் இருக்கட்டும். இந்த படிகாரக் கல் உங்கள் வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜி, பீரோவில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி, ஈர்த்து வெளியே தள்ளிவிடும். பிறகு நீங்கள் பணத்தைக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைத்தால் நீங்கள் சம்பாதித்த பணத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் அழியும்.

- Advertisement -

பணத்தில் கூட எதிர்மறை ஆற்றல் தங்கி இருக்குமா. நிச்சயம் இருக்குங்க. உங்க கூட வேலை செய்றவங்க, உங்க சொந்தக்காரங்க, எல்லோரும் நீங்கள் சம்பாதிப்பதை பார்த்து கண் திருஷ்டி வைத்தால், நிச்சயமாக நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் கையில் தாங்காது. இவன் மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றான். இவனுக்கு மட்டும் பணம் கை கைக்கு செலவுக்கு எப்படி தான் கிடைக்குதோ! என்று உங்கள் வருமானத்தை யாராவது ஒருவர் நினைத்து மனதிற்குள் புழுங்கினாலே முடிந்தது.

உங்கள் கைக்கு வந்த பணம் கையில் தங்காமல் போய்விடும். வீண்விரயம் ஆகும். இன்று நாம் எல்லோருக்கும் பெரும்பாலும் நடப்பது இதுதான். அவரவருக்கு இருக்கக்கூடிய கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவருக்கு நம்முடைய கஷ்டங்கள் எதுவுமே தெரியாது. ‘இவனுக்கு என்ன குறை’ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு, நிலம் வாங்கி கடன் இல்லா பெரு வாழ்வு வாழ செவ்வாய் கிழமையில் முருப்பெருமானை இப்படி வழிபாடு செய்யுங்கள். இதன் பிறகு நீங்கள் வாழ போகும் ராஜ வாழ்கையை யாராலும் தடுக்க முடியாது.

இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு உங்கள் கைக்கு வரும் பணத்தை நேர்மறையாக மாற்றி, பீரோவில் சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றுங்கள் போதும். நம்பிக்கை இல்லாமல் இதை செய்தால் படிகாரக்கல்லுக்கு நிச்சயம் பவர் இருக்காது. அது வெறும் கல் தான். நம்பிக்கையோடு செய்யும்போதுதான் படிகாரங்கல், பரிகார கல்லாக மாறும் என்ற கருத்துடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -