ஒரே ஒரு கருப்பு நூல் இருந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ambal
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது கடல் அளவு இருக்கும். சந்தோஷம் கடுகளவு கூட இருக்காது. பிறந்ததிலிருந்தே பிரச்சனையில் வளர்ந்தவர்கள், வளர்ந்த பின்பும் நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய தாந்திரீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இது தாந்த்ரீக பரிகாரமாக இருந்தாலும், அதில் வெற்றி பெற அந்த இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு நிச்சயம் தேவை. ஆகவே குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை படிக்க தொடங்கவும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்க்கையில் இருக்கும் கருப்பான கஷ்டங்கள் கடந்து போக கருப்பு கயிறு பரிகாரம்:
இதற்கு நமக்கு முதலில் தேவையான பொருள் ஒரு எலுமிச்சம் பழம். பிறகு கருப்பு கயிறு. அதை எப்படி அளந்து எடுக்க வேண்டும் என்றால், உங்கள் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை எவ்வளவு நீளம் இருக்கிறீர்களோ, அதே அளவுக்கு ஒரு கருப்பு கயிறு எடுத்துக் கொள்ளுங்கள். கயிறு என்றால் கருப்பு நிறத்தில் துணி தைக்க பயன்படுத்தும் நூலை பயன்படுத்தினால் கூட போதும். காட்டன் நூலாக பயன்படுத்துங்கள்.

- Advertisement -

தயாராக எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை, உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தின் நினைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு கடந்து போக வேண்டும், என்ற பிரார்த்தனை செய்து, பிறகு அளந்து எடுத்து வைத்திருக்கும் அந்த கருப்பு நூலை எலுமிச்சம் பழத்தில் சுற்றி விடவும். எப்படி வேண்டுமென்றாலும் சுற்றிக் கொள்ளலாம். அது உங்களுடைய சௌகரியம். நூல் சுற்றிய பிறகு எலுமிச்சம் பழம் வெளியே தெரிந்தாலும் தவறு கிடையாது.(இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்து எலுமிச்சம் பழத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்).

இந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டு பக்கத்தில் கடல் இருந்தாலும் அதில் கொண்டு போய் இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு விட்டு இரண்டு கை கூப்பி வணங்கி உங்களுடைய கஷ்டங்கள் இன்றோடு முடிந்தது என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுங்கள்.

- Advertisement -

வாரம் தோறும் சனிக்கிழமை, ஏழு சனிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வாழ்க்கையை பிடித்த தரித்திரம் பீடை விலகி நீங்கள் படக்கூடிய கஷ்டத்திலிருந்து வெளிவந்து விடுவீர்கள். இந்த எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் போட முடியாதவர்கள் என்ன செய்வது. வீட்டிற்கு கொஞ்சம் தொலைவில் ஊருக்கு ஒதுக்கப்புறமான இடத்தில் கொஞ்சமாக மண்ணைத் தோண்டி அதற்கடியில் இந்த எலுமிச்சம் பழத்தை புதைத்து வைத்து விட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை அன்று தவறாமல் இந்த ஒரு பொருளை வாங்கி வைத்து உங்கள் முன்னோரை வழிபட்டால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி ராஜயோகம் தேடி வரும்.

இந்த எலுமிச்சம்பழம் மற்றவர்கள் காலில் படும்படியோ அல்லது மற்றவர்கள் தாண்டவோ செய்யக்கூடாது. அதற்காக மனிதர்கள் காலில் படாமல் மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். முடிந்தவரை இந்த எலுமிச்சம் பழத்தை ஓடும் தண்ணீரில் விட்டு விட பாருங்கள். ஓடும் தண்ணீரில் விடுவது தான் சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -