காலையில் எழுந்தவுடன் மஹா பெரியவா சொன்ன இந்த 2 வார்த்தையை மூன்று முறை உச்சரித்தால் போதும். காலத்தால் வரும் கஷ்டங்கள் எல்லாம் காற்றோடு காற்றாக பறந்து போகும்.

kani-periyava
- Advertisement -

ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில் கஷ்டத்திற்காக பஞ்சம். ஒரு கஷ்டம் போனால் இன்னொரு கஷ்டம் வரிசை கட்டி நிற்கிறது. இந்த கஷ்டத்திற்கு மட்டும் ஒருபோதும் கஷ்டம் வந்ததே கிடையாது. ஏதாவது ஒரு வகையில் அந்த இறைவன் நமக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான். அப்போதுதான் நமக்கு அந்த கடவுளின் ஞாபகம் வரும் போல. சரி, மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் என்பது ஒரு தொடர்கதை. அதற்கு விடிவு காலமே கிடையாது. இன்று ஒரு பிரச்சனையை சரி செய்தால், நாளை ஒரு கஷ்டம் வரத்தான் செய்யும். இதுதான் விதியும் கூட.

மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட, ஒவ்வொரு நாளையும் சந்தோஷமான நாளாக மாற்ற என்ன செய்வது. மகா பெரியவா சொன்ன அற்புதம் வாய்ந்த இந்த இரண்டு வார்த்தை மந்திரத்தை காலையில் எழுந்து மூன்று முறை உச்சரித்தால் போதும். உங்கள் வாழ்வு சுகமாக மாறும். சந்தோஷமாக மாறும். அது என்ன மந்திரம் எப்படி உச்சரிக்கலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

நீண்ட நாள் கஷ்டத்தை போக்க, பக்தர்களுக்கு மகா பெரியவா உபதேசம் செய்த மந்திரம்:
மகா பெரியவா அவர்கள், அவர்களுடைய வாயாலேயே ஒரு பக்தருக்கு இந்த மந்திரத்தை உபதேசம் செய்து உள்ளார். நீண்ட நாள் வாழ்க்கையில் தீராத துன்பத்தில் துயரத்தில் அவதிப்பட்ட வந்த ஒருவர், மகா பெரியவா அவர்களை சந்தித்து, தனக்கு இருக்கும் துன்பத்தை எல்லாம் பெரியவா பாதங்களில் இறக்கி வைத்துள்ளார்.

மகா பெரியவா தன் பக்தன் சொன்ன கஷ்டங்களை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டார். இறுதியாக மஹா பெரியவா அவர்கள் தன் வாயாலேயே, இந்த மந்திரத்தை அந்த பக்தனுடைய காதில் உபதேசம் செய்து உள்ளார். காலையில் எழுந்து மூன்று முறை இந்த மந்திரத்தை மட்டும் சொல் போதும். உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்ற படி சொன்னாராம். அந்த அற்புதம் வாய்ந்த மஹா பெரியவா அவர்கள் வாயாலேயே உபதேசம் செய்த மந்திரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நீங்களும் காலையில் எழுந்த உடனேயே குளிக்க வேண்டாம், பல் தேய்க்க வேண்டாம், இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு தினசரி வேலையை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறும். சரி சரி அந்த மந்திரம் என்ன சீக்கிரம் அதை சொல்லுங்கள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

‘அம் பகவ’ இதுதாங்க அந்த மந்திரம். மூன்று முறை என்பது ஒரு கணக்கு தான். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். உதாரணத்திற்கு, ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள். உடனடியாக அதிலிருந்து தப்பிக்க சமயோசித புத்தி வேலை செய்ய வேண்டும். அப்போதும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கடவுள் வந்து உங்களுக்கு கில்லாடியான ஐடியாக்களை சொல்லுவார். கடவுள் நேரில் வருவாரா? யார் ரூபத்திலாவது வந்து உதவுவார் கவலைப்படாதீங்க. இந்த மந்திரத்தை மட்டும் மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திப்பாருங்கள். உங்களுக்கு இந்த மந்திரத்தின் சக்தி என்ன என்பது புரியும்.

இதையும் படிக்கலாமே: எலியும் பூனையும் ஆக இருக்கும் மாமியார் மருமகளை அன்பால் இணைக்க கூடிய அற்புதமான இந்த விளக்கை வீட்டில் ஏற்றி பாருங்கள். சந்தோஷமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் உங்கள் இல்லம் தேடி வரும்.

‘அம்’ என்பது ஒரு மங்கள வார்த்தை. பகவ என்பது பகவானே என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. இந்த இரண்டு வார்த்தையும் சேர்ந்து உங்களுக்கு நன்மையை கொடுக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -