எலியும் பூனையும் ஆக இருக்கும் மாமியார் மருமகளை அன்பால் இணைக்க கூடிய அற்புதமான இந்த விளக்கை வீட்டில் ஏற்றி பாருங்கள். சந்தோஷமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் உங்கள் இல்லம் தேடி வரும்.

mamiyar sandai vilakku
- Advertisement -

குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சண்டை சச்சரவுகள் நீளாமல் இருந்தால் அதனால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அது தொடர்கதையாக தொடரும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதனால் நிம்மதி இருக்காது. அதிலும் முக்கியமாக மாமியார் மருமகள் சண்டையை சமாதானப்படுத்தவே முடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட சண்டையை கூட சமாதானப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று மாமியார் மருமகள் சண்டையை பற்றிய பழமொழி ஒன்று இருக்கிறது. மாமியார் தவறே செய்தாலும் அது தவறாக தெரியாது. அதே மருமகள் செய்தால் அதை பெரிய குற்றமாக கருதி அவளிடம் சண்டை போடும் வழக்கம் இன்றளவும் பல குடும்பங்களில் இருந்து வருகிறது. சில குடும்பங்களில் மாமியார் என்ன செய்தாலும் மருமகள் மாமியாரிடம் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனாலேயே கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று அழிந்து போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. இதே மாமியாரும் மருமகளும் சண்டை சச்சரவுகள் இன்றி அன்போடு இருந்தால் கூட்டுக் குடும்பம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழும்.

- Advertisement -

இந்த மாமியார் மருமகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு தீபம் ஏற்றினாலே போதும். அந்த தீபத்தை மாமியார் ஏற்றலாம் அல்லது மருமகள் ஏற்றலாம் அல்லது இருவரும் சேர்ந்தே ஏற்றலாம். திடீரென்று புதிதாக ஒரு விளக்கை வீட்டில் ஏற்றும்பொழுது அதனால் சண்டைகள் ஏற்படும் என்னும் சூழ்நிலையில் மருமகளின் தாயார் தன் மகளும் அவள் மாமியாரும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து அவர்கள் வீட்டிலேயே இந்த தீபத்தை ஏற்றலாம்.

புதிதாக இரண்டு அகல் விளக்குகளை வாங்கி வர வேண்டும். அதை சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் அந்த அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஐந்து மிளகு, சிறிது சீரகம் போட்டு இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து இணைத்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தினமும் ஏற்றலாம் அல்லது சண்டைகள் ஏற்படும் பொழுது ஏற்றலாம். சண்டைகளே வரக்கூடாது என்று நினைப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். மேலும் இந்த தீபத்தை மாலை ஆறு மணிக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பெண்கள் கையில் எப்போதும் காசு தாராளமாக புழங்க இதை யாருக்கும் தெரியாமல் செய்து விடுங்கள். பண வரவிற்கு பெண்கள் செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்.

இந்த தீபத்தை மாமியார் மருமகள் சண்டைக்கு மட்டும்தான் ஏற்ற வேண்டும் என்று இல்லை. கணவன் மனைவிக்கிடையில் சண்டை ஏற்பட்டாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். தந்தை மகனுக்கு இடையில் சண்டை ஏற்பட்டாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். மொத்தத்தில் குடும்பத்தில் இருக்கும் எந்த நபர்களுக்கு இடையில் சண்டை ஏற்படுகிறதோ அந்த நபர்கள் சண்டையில் இருந்து விலகி மன ஒற்றுமையுடன் வாழ இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.

- Advertisement -