பிள்ளையாரை இப்படி வழிபாடு செய்தால், அன்றாட வாழ்க்கையில் எந்த கஷ்டமுமே வராது. தினம் தினம் வாழ்க்கையை போராட்டமாகவே வாழ்பவர்கள் இதை செஞ்சு பாருங்க.

pillaiyar
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பிரச்சினைகள் வருவது என்பது ரொம்பவும் இயல்பான ஒரு விஷயம் தான். பிரச்சினைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆனால் வாழ்க்கையே பிரச்சனைக்குள் புதைந்திருந்தால், அந்த வாழ்க்கையில் இன்பமும் இருக்காது. தினம் தினம் பிக்கள் பிடுங்கள், தினம் தினம் போராட்டம், ஒரு நாளை கடப்பதற்குள் ஏண்டா இந்த நாள் விடியது அப்படின்னு தோணுது என்பவர்கள் விநாயகரை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

தீராத கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு:
காலையில் எழுந்த உடனேயே குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு, கண் விழியுங்கள். பிறகு வழக்கம் போல உங்கள் காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, விக்ணங்களை தீர்க்கும் விநாயகா, என்னுடைய பிரச்சனையையும் கொஞ்சம் தீர்த்து வையப்பா, என்று கேளுங்கள். வாய்விட்டு கேட்டால் கூட தப்பில்லை.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் இரண்டு ஏலக்காயை விநாயகருக்கு நிவேதியமாக வச்சிடுங்க. தினமும் இரண்டு இனுக்கு அருகம்புல் கிடைத்தால் அதை எடுத்து வந்து வைத்து விநாயகருக்கு சூட்டுங்கள். இரண்டு கை எடுத்து கும்பிட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள்.

வேலைக்கு போறவங்க, காலேஜ் போறவங்க, பள்ளிக்கூடம் போறவங்க, யார் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்துவிட்டு அன்றாடம் வீட்டு வேலையை தொடங்கினால் கூட அவர்களுக்கு இருக்கும் மன கஷ்டம் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். வழிபாட்டை செய்து முடித்துவிட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது அந்த இரண்டு ஏலக்காய்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு செல்லலாம். அவ்வளவுதான்.

- Advertisement -

நிவேதனமாக பிள்ளையாருக்கு வைத்த அந்த இரண்டு ஏலக்காய்கள் உங்களுக்கு ஒரு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். ரொம்ப ரொம்ப கஷ்டமா நகர்ந்து செல்லும் நாட்கள் கூட சந்தோஷமாக நகர்ந்து செல்லும். உங்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் கூட அதையெல்லாம் தூசி மாறி தட்டி விட்டு, உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போயிட்டே இருப்பீங்க.

அந்த அளவுக்கு தைரியத்தை பிள்ளையார் உங்களுக்கு கொடுப்பார். தடைகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து போடுவார். வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி இன்பமான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் காட்டித் தருவார். ஆனால் இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது. தினமும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நிலை வாசலில் இந்த 1 பொருளை வைத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் தீருமா தீராதா என்ற கேள்விக்கு உண்டான பதில் சுலபமாக கிடைத்து விடும்.

எனக்கு ஏலக்காய் சாப்பிட பிடிக்காது நான் என்ன செய்வது. நிவேதியம் செய்த ஏலக்காய்களை அப்படியே டப்பியில் போட்டு சேகரித்து வாருங்கள். அதை எல்லாம் சைவம் சமைக்கும் போது  பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். மற்ற இனிப்பு பொருட்கள் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேல் சொன்ன வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் விநாயகர் உங்களை நிச்சயம் கைவிடமாட்டார் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -