நிலை வாசலில் இந்த 1 பொருளை வைத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் தீருமா தீராதா என்ற கேள்விக்கு உண்டான பதில் சுலபமாக கிடைத்து விடும்.

door-vasal-lakshmi
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப கஷ்டங்கள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அதில் சில கஷ்டங்களை நம்மால் வெளியில் சொல்ல முடியும். சிலவற்றை நம்மால் வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைக்கு தற்சமயம் தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா? இந்த கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் பின் சொல்லக் கூடிய குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

உதாரணத்திற்கு கடன் சுமை குறையுமா குறையாதா? பணப்பிரச்சனை தீருமா தீராதா. வேலை கிடைக்குமா கிடைக்காதா. நல்லவரன் அமையுமா அமையாதா. அல்லது வீட்டில் குறிப்பிட்ட நபருக்குள் இருக்கும் சண்டை சச்சரவு சரியாகுமா, ஆகாதா. கணவன் மனைவி ஒன்று சேர்வார்களா இல்லையா என்பதை எல்லாவற்றையும் இந்த பரிகாரத்தை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிலை வாசல் பரிகாரம்:
இரவு தூங்க செல்வதற்கு முன்பு கதுவை தாழ்ப்பால் அல்லது பூட்டு போடுவிங்க அல்லவா அப்போது இந்த பரிகாரத்தை செய்யணும். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். உங்கள் வீட்டில் சின்ன துண்டு வெல்லம் இருக்கும் அல்லவா. அதை கையில் எடுத்துக்கோங்க. நிலை வாசலை தாண்டி வெளியில் வந்து தரையில் அந்த வெல்லத்தை வைத்து விடுங்கள். (வெல்லத்தை வைக்கும் போது உங்கள் மனதில் ஒரு குழப்பம் இருக்க அல்லவா? அந்த குழப்பத்திற்கான தீர்வை, குலதெய்வம் காட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெல்லத்தை வைக்க வேண்டும்.)

வெல்லத்தை வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் வந்து கதவை சாத்திக் கொள்ளுங்கள். மறுநாள் காலை எழுந்து போய் அந்த வெல்லத்தைப் பார்த்தால் வெல்வம் கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போயிருந்தால், எதை மனதில் நினைத்து அந்த வெல்லத்தை வைத்தீர்கள், எந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று நினைத்தீர்களோ, அந்த பிரச்சனை சீக்கிரம் உங்களை விட்டு போய்விடும் என்று அர்த்தம்.

- Advertisement -

ஒருவேளை வெல்லம் பாதி இருந்தும் இல்லாமலும் உருகிய நிலையில் இருந்தால் உங்கள் கஷ்டம் சரியாக ஒரு சில வாரங்களோ மாதங்களோ இருக்கும் என்று அர்த்தம். அதுவும் இல்லாமல் நீங்கள் வைத்த வெல்லம் வைத்தபடி அப்படியே தான் இருக்கிறது என்றால் உங்கள் கஷ்டங்கள் தீருவதற்கு இன்னும் கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுக்கலாம். இப்போதைக்கு அந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்காது என்பதுதான் அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: பூஜை விரதம் எதுவும் இல்லாமல் தூங்கி எழுந்தவுடன் இந்த ஒரு வரி மந்திர வார்த்தையை மூன்று முறை உச்சரித்தாலே போதும். உங்கள் தலையெழுத்தே மாறி ராஜ போக வாழ்க்கையை வாழலாம்.

இந்த பரிகாரத்தை செய்வதனால் நமக்கு என்ன பயன். மன குழப்பம் தீரும். நம்முடைய மனதிற்கு ஒரு தெளிவு பிறக்கும் போது பிரச்சனைகளுக்கு உண்டான வழியும் சீக்கிரம் கிடைக்கும். இந்த பிரச்சனை இப்போது சரியாகாது, என்று அப்படியே விட்டு விட்டு கொஞ்சம் தள்ளிப் போட்டாலே பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிடும். தீர்வு கிடைக்காத பிரச்சனைகளை எல்லாம் போட்டு குழப்பிக்கொண்டு, இருக்கிற வேலையையும் சரியாக செய்யாமல் நேரத்தை வீணாக்காமல் இருக்கலாம். தேவைப்படுபவர்கள் மேலே சொன்ன எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -