கஷ்டகாலம் வரும்போதும் கூட இனி கவலையே படவேண்டாம். இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் கெட்ட நேரத்திலும் நல்லதே நடக்கும்.

theertham
- Advertisement -

சில பேர் வாழ்க்கை, சில நேரங்களில், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அப்படியே நகர்ந்து செல்லும். ஆனால் கெட்ட நேரம் ஆரம்பிக்கும் போது வாழ்க்கை தலைகீழாக மாறும். கையில் இருந்த பொருட்களை எல்லாம் இழுந்து கஷ்டப்படுவார்கள். 10 வருடத்திற்கு முன்பு, சொத்து சுகத்தோடு நகைநட்டோடு வாழ்ந்த குடும்பம், 10 வருடம் கழித்து பஞ்சத்தில் அடிபட்டு இருக்கும். இதற்கு காரணம் அவர்களுடைய கெட்ட நேரம் தொடங்கியதுதான். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். சோர்ந்து போகாமல் இருக்க, கஷ்ட காலத்தையும் சமாளிக்க, ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இங்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கெட்ட நேரம் வரும்போது நல்லது நடக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெள்ளி டம்ளர் கட்டாயம் தேவை. இவ்வளவு கஷ்ட காலத்தில் வெள்ளி டம்ளர் எப்படி வாங்குவது. என்று யோசிக்காதீங்க. கொஞ்சம் சிரமப்பட்டு நம்பிக்கையோடு ஒரு சின்ன வெள்ளி டம்ளர் அல்லது வெள்ளி கிண்ணம் அல்லது ஏதோ ஒரு வெள்ளி பாத்திரம் தண்ணீர் ஊற்றி வைக்க, குறைந்த செலவில், சின்னதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்க செல்லும் போது பூஜை அறையில் இந்த வெள்ளி பாத்திரம் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க வேண்டும். அதில் இரண்டு துளசி இலைகளை கூட போடலாம்.

- Advertisement -

துளசி இலை கிடைக்கவில்லை என்றால் வாசம் நிறைந்த ஏலக்காய் அந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். நறுமணம் நிறைந்த இந்த தண்ணீர், இரவு முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து, சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசலில் கோலம் இட்டு, வீடு கூட்டிவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து இந்த தண்ணீரை வீடு முழுவதும் மூளை முழுக்குகளில் தெளிக்க வேண்டும். பரிகாரம் அவ்வளவுதான். தினம் தோறும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் கெட்ட காலத்திலும் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

கஷ்டங்கள் வருவதை முழுமையாக யாராலும் அப்படியே தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆனால் வரக்கூடிய கஷ்டத்திலிருந்து, கிடைக்கக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும். அதற்காகத்தான் பரிகாரங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் இழந்ததை எல்லாம் ஒரே நாளில் மீட்டு விட முடியாது. ஆனால் கையில் மிச்சம் இருக்கக்கூடிய பொருளை மேலும் மேலும் இழக்காமல் இருக்கலாம். தேவைக்கு ஏற்ப செல்வ வளம் நம் வீட்டில் நிலைத்திருக்கும். சண்டை சச்சரவுகள் வருவது குறையும். நிச்சயமாக நல்லது நடக்கும்.

- Advertisement -

வெள்ளி, சுக்கிர பகவானுக்கு உரியது. நீர், சந்திர பகவானுக்கு உரியது. மஞ்சள் தூள் குரு பகவானுக்கு உரியது. இந்த மூன்று கிரகங்களின் மனநிறைவான ஆசீர்வாதத்தை பெற்று தரக்கூடிய பரிகாரம் தான் இது. எந்த வழியில் பிரச்சனை வந்தாலும் அதை ஒரு கை பார்ப்பதற்கு மன உறுதியை பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான பரிகாரம் போதும். இந்த பரிகாரத்தை எத்தனை நாட்கள் செய்வது.

இதையும் படிக்கலாமே: கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கடனை அடைக்க இது போன்ற அற்புதமான நாள் கிடைக்காது. இன்றைய நாளில் இந்த நேரத்தை தவற விடாமல், இந்த எளிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

தொடர்ந்து 48 நாட்கள் செய்து பாருங்கள். பிறகு தினமும் இந்த பரிகாரத்தை விடாமல் செய்ய நீங்களே தொடங்கிவிடுவீர்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு நல்லதும், மனநிறைவும் உங்களுக்கு கிடைக்கும். கஷ்டங்கள் வருவது என்பது மனிதர்களுக்கு இயற்கை தான். அந்த கஷ்டங்களைக் கண்டு துவண்டு போகாதீங்க. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தோடு வாழ மன உறுதியை தர வேண்டி, பிரார்த்தனையை அந்த எம்பெருமானிடம் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -