கஷ்டம் தீர கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டிய 2 செடிகள். கஷ்டம் வரும்போது இந்த செடிகளே, இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்யுன்னா பாருங்களேன்.

thulasi
- Advertisement -

குடும்பத்தில் பிரச்சனைகள் வரக்கூடாது. வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடைய மனதில் பாசிட்டிவ் எனர்ஜி முழுமையாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கெடுதல் நம் குடும்பத்திற்கு வர காத்திருந்தாலும், அந்த கெடுதலின் மூலம் நம் வீட்டில் இருப்பவர்களுக்கு அசம்பாவிதமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள், இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இந்த இரண்டு செடிகளை வைத்துவிட்டு இந்த இரண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தாலே போதும். உங்கள் கஷ்டம் தீரும். இந்த செடி செழிப்பாக வளர்வது போல உங்களுடைய குடும்பமும் வளர்ச்சி அடையும். வாங்க நேரத்தை கடத்தாமல் நன்மை தரக்கூடிய அந்த எளிமையான குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கஷ்டம் தீர வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்:
எல்லோர் வீட்டிலும் முதலாவதாக இருக்க வேண்டிய செடி, துளசி செடி. பெரும்பாலும் இன்று, இந்த துளசி செடி எல்லார் வீட்டிலும் இருக்கிறது. உங்கள் வீட்டில் துளசி செடி இல்லை என்றால், நாளை ஒரு செடியை வாங்கி வந்து வைத்து விடுங்கள். இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள செடி தொட்டா சிணுங்கி செடி. இது பெரும்பாலும் வீதி ஓரங்களில் வயல்வெளிகளில் வளர்ந்து இருக்கும். அந்த செடி ஒன்றை எடுத்து வந்து தொட்டியில் வீட்டில் வைத்து விட வேண்டும். துளசி செடி தொட்டாசினிங்கி செடி இது இரண்டும் தனித்தனி தொட்டியில் பக்கத்தில் பக்கத்தில் இருக்கலாம். தவறு கிடையாது. இடம் இருக்கிறது என்றால் தோட்டத்தில் மண்ணிலேயே இந்த இரண்டு செடிகளை வைக்கலாம்.

துளசி செடிக்கு மட்டும் வாரத்தில் இரண்டு நாள் செவ்வாய் வெள்ளி சின்ன மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். தினமும் இந்த இரண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது அந்த செடிகளோடு நீங்கள் மனம் விட்டு பேச வேண்டும். இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்வீர்கள். உங்களுடைய கஷ்டத்தை சொல்லி, அதே போல உயிருள்ள இந்த செடிகளிடம் உங்களுடைய கஷ்டத்தை சொல்லி தண்ணீர் ஊற்றுங்கள்.

- Advertisement -

ஒரு சில நாட்களில் அந்த செடிகள் உங்களுடைய உயிர் நண்பர்களாகவே மாறிவிடும். நம் வீட்டில் நம்முடைய குழந்தை, கணவர் எல்லாம் எப்படி நம்மை புரிந்து வைத்துள்ளார்கள். அதேபோல இந்த செடிக்கும் உங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், சந்தோஷம் தெரிய தொடங்கும். சொல்லப்போனால் உயிருள்ள மனிதர்கள் கூட, நம்முடைய எண்ணங்களை புரிந்து கொள்வது கிடையாது. ஆனால் இந்த ஒரு அறிவு கொண்ட செடிகள் நீங்கள் தண்ணீர் ஊற்றத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே, நீங்கள் அந்த செடியோடு பேச தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ளும்.

பிறகு உங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால், உங்களுடைய கஷ்டம் தீர அந்த செடிகளே, இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்ய தொடங்கிவிடும். பிறகு என்ன. உங்களுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும். நீங்கள் வேண்டும் என்றால் இந்த இரண்டு செடிகளை உங்கள் வீட்டில் வைத்து பேசி தண்ணீர் ஊற்றி வளர்த்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே: உங்கள் துன்பங்கள்,கடன் என அனைத்தும் நீங்கி, செல்வ வளத்துடன் வாழ வழி செய்ய இந்த விரலி மஞ்சள் போதும். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் எளிய பரிகாரம்

உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். உங்களாலேயே நம்ப முடியாது. நிறைய அதிசயங்களை கண்கூடாக பார்ப்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -