கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து செல்வ மழை பொழிய அஷ்ட லக்ஷ்மிகளையும் வீட்டிற்குள் அழைக்கும் அற்புத மந்திரம். இதனை தினமும் உச்சரிக்க பல அற்புதங்கள் நிகழும்

lakshmi
- Advertisement -

பலரும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் பலவிதமான குறைகளை சொல்லி என் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்தது பணம் பெருக வேண்டும், செல்வம் சேர வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்வார்கள். ஆனால் இவற்றிற்கான முயற்சிகள் எதனையும் தான் செய்யாமல் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் போதும் அனைத்தும் தானாகவே நடந்துவிடும் என்ற அசாதாரண எண்ணத்துடன் இருப்பார்கள். பணம், செல்வம் இவை அனைத்தும் நம்மிடம் நிலைத்திருக்கவும், அவை நம்மை வந்து சேர்வதற்கும் முதலில் நம்மிடம் இருக்க வேண்டியது கடின உழைப்பு, தெளிவான அறிவு, நல்ல சிந்தனை போன்றவையாகும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளையும் நாம் வணங்குவதன் மூலம் இவை அனைத்தும் நமது வீட்டில் நிரந்தரமாக குடிகொள்கின்றன. இவ்வாறு அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் அழைக்கும் ஒரு எளிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

praying-god

பார்கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி தேவியே எட்டு விதமான செல்வங்களை அள்ளித்தரும் தெய்வமாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு செல்வத்திற்கு தனித்தனியாக எட்டு விதமான தோற்றங்களில் அருள் தரும் மகாலட்சுமியே அனைவராலும் அஷ்டலட்சுமி என்று கொண்டாடப்படுகிறார். “அஷ்டம்” என்ற வட சொல்லுக்கு எட்டு என்று பொருள் படுகிறது.

- Advertisement -

அஷ்டலட்சுமிகள்:
தான்ய லட்சுமி: தான்ய லட்சுமியின் அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் போதும். எப்போதும் நமது வீட்டில் உணவிற்காக பஞ்சம் என்பதே ஏற்படாது. காலம் முழுக்க பசி இன்றி நிம்மதியாக உணவு சாப்பிட்டு உயிர் வாழ முடியும்.
வீரலட்சுமி: நமக்கு ஏற்படும் துன்பம் மற்றும் இடர்பாடுகளை சமாளிக்கும் அளவிற்கு துணிவை அள்ளித் தருபவளே வீரலட்சுமி எனப்படுகிறார்.
கஜலட்சுமி: வாழ்விற்குத் தேவையான நற்பேறுகள் அனைத்தையும் அள்ளித் தருபவளே கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறார்.

mahalakshmi1

சந்தான லட்சுமி: நமது வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பவர் தான் சந்தானலட்சுமி.
விஜயலட்சுமி: நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் வெற்றி பெறச் செய்பவள் தான் விஜயலட்சுமி.
வித்யா லட்சுமி: கல்வி அறிவு, நல்ல சிந்தனை இவை அனைத்தையும் அள்ளித் தருபவள் வித்யா லட்சுமி.
தனலட்சுமி: பணம் பொன் பொருள் இவை அனைத்தையும் அள்ளித்தருபவளே தனலட்சுமி.

- Advertisement -

cash

இவ்வாறான செல்வங்கள் அனைத்தையும் அஷ்டலட்சுமிகளின் அருள் இருந்தால் மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கச் செய்ய முடியும். இவ்வாறான அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய இந்த ஒரு பரிகாரத்தை முறையாக செய்து வந்தாலே போதும்.

காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையின் முன் நின்று ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் இருபுறங்களிலும் கஸ்தூரிமஞ்சள் பூச வேண்டும். பின்னர் எலுமிச்சை பழத்தின் நடுவில் குங்குமம் வைத்து பொட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி

poojai arai

ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்
ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்
ஓம் ஸ்ரீம் க்லீம் ரீம் ரீம்

lemon

இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி கடவுளை வணங்கிய பின்னர் எலுமிச்சை பழத்தை நிலைவாசற் படியின் வலது புறம் ஒன்று, இடது புறம் ஒன்று என்று வைத்துவிட வேண்டும். மறுநாள் இந்த எலுமிச்சை பழத்தை மாற்றி இதேபோல் புதியதாக வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக நமது வீட்டில் குடி கொண்டு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -