செல்வம் சேர மூன்றாம் பிறை தரிசனம்

sivan moondram pirai
- Advertisement -

அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாவது நாளை தான் நாம் மூன்றாம் பிறை நாள் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய நாளில் சந்திர தரிசனம் செய்வது அத்தனை சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் சந்திர தரிசனத்தை காண்பதற்கு பெரும் யோகம் வேண்டும் என்று சொல்வார்கள்.

மூன்றாம் பிறை பார்த்தவாறு நாம் வேண்டும் எதுவும் நமக்கு அப்படியே நடக்கும் என்பதும் ஐதீகம். அப்படியான இந்த நாளில் நம்முடைய செல்வ வளர்ச்சி பெருக்கிக் கொள்ளக் கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

இன்று திங்கட்கிழமை மாலை மூன்றாம் பிறை தரிசனம். சந்திரனின் இந்த பிறை தரிசனமானது சந்திரனுக்குரிய நாளான இன்று திங்கட்கிழமை வந்திருப்பது அதை விசேஷமானதாக கருதப்படுகிறது. அதே போல் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். சிவபெருமானின் தலையில் இருக்கும் மூன்றாம் பிறை நிலவு தான் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தின் பிறை நிலவு ஆகும்.

அப்படியான இந்த நாளில் சந்திரனை நினைத்து எளிமையான இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை மாலை 6.30 மணிக்கு மேல் 7:15 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். இதற்கு பூஜை அறையில் ஒரு கண்ணாடியை எடுத்து வைத்து விடுங்கள். கண்ணாடிக்கு வெறும் விபூதியால் மூன்று பட்டை போடுங்கள். நடுவில் மஞ்சளால் மட்டும் ஒரு பொட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கண்ணாடிக்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு வெள்ளை நிற பூக்களால் கண்ணாடிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி கிடைக்காத பட்சத்தில் பச்சரிசியை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சனை செய்யும் வேளையில் உங்களுடைய செல்வ வளம் பணப்பிரச்சனை மற்றும் எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அது தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் சந்திர மவுலீஸ்வராய நமஹ

என்ற இந்த மந்திரம் சிவனையும் சந்திரனையும் ஒன்றாக இணைத்து சொல்லக் கூடியது. அப்படியான இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு இந்த அரிசியோ அல்லது நீங்கள் அர்ச்சனை செய்த மலரையோ கையில் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து சந்திர தரிசனம் பார்க்க வேண்டும்.

- Advertisement -

வசதி உள்ளவர்கள் அந்த நேரத்தில் கையில் வெள்ளி தங்கம் போன்றவற்றை வைத்துக் கொண்டு சந்திரனை பார்த்து வணங்கினால் நல்லது. அது முடியாதவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இது செல்வ வளத்தை பெருக்கிக் கொடுக்கும். வெளியில் வந்து சந்திரனை பார்க்கும் போதும் அந்த சந்திரன் மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.

அதன் பிறகு வீட்டில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு பூஜையை நிறைவு செய்து விடுங்கள். இந்த வழிபாடு உங்களின் செல்வ நிலையை பல மடங்கு உயர்த்தும். அது மட்டும் இன்றி சந்திரனை பகவான் மனோகாரகன் என்று சொல்வார்கள். அவரின் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை காணும் போது நம்முடைய மனமும் ஒரு நிலைப்பட்டு தெளிவடையும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற சிவ மந்திரம்

இந்த வழிப்பாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -