உங்கள் குடும்பத்திற்கு அடுத்தடுத்து தீராத துயரங்கள் தீராத கஷ்டங்கள் வந்து அடி மேல் அடி விழுகிறதா? உடனடியாக இவரை ஒரே ஒரு முறை போய் பாருங்கள். கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்.

narasimar
- Advertisement -

வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்கள் வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். கஷ்டம் இல்லாமல் பிரச்சனைகள் இல்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாது. அவரவர் கர்மவினைக்கு ஏற்ப அவரவர் கஷ்டத்தை அனுபவித்து தான் தீர வேண்டும். ஆனால் சில பேருக்கு விழி பிதுங்கும் அளவிற்கு பிரச்சினைகள் வந்து சூழ்ந்திருக்கும். மூச்சைக் கூட நிம்மதியாக விட முடியாது. ஒரு பிரச்சினையில் இருந்து வெளிவந்து இருப்பார்கள். அடுத்து ஒரு இடி வந்து தலைமேல் விழுந்திருக்கும். சில வீடுகளில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் கூட தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் அளவிற்கு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடும்.  இப்படிப்பட்டவர்கள் ஆன்மீக ரீதியாக செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

narasimmar

உக்கிரமான பிரச்சினைகளுக்கு, உடனடியாக தீர்வு கொடுக்கக் கூடிய தெய்வங்கள் என்றால் அது உக்கிரமான தெய்வங்களால் மட்டும் தான் முடியும். அந்த வரிசையில் உங்களுடைய குடும்ப கஷ்டங்கள் தீருவதற்கு நீங்கள் நரசிம்மரின் பாதங்களில் தான் போய்விழ வேண்டும். வேறு வழியே கிடையாது. உங்களுடைய வீட்டின் அருகில் நரசிம்மர் இருக்கக்கூடிய எந்த கோவில் இருந்தாலும் சரி, வீட்டின் அருகில் கோவில் இல்லை என்றாலும் சரி, கொஞ்சம் தேடி கண்டுபிடித்து நரசிம்மர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு, நரசிம்மரின் பாதங்களை தொட்டு வணங்கி ‘ஓம் நமோ நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை 1008 முறை உச்சரித்து உங்களுக்கு இருக்கக்கூடிய குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி செய்து விட்டால் ஒரே நாளில் உங்களுடைய பிரச்சனை முடிந்து விடாது.

narasimmar-fear

நரசிம்மரை தரிசனம் செய்து விட்டீர்கள். வீட்டிற்கு வந்து விட்டீர்கள். தினமும் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து வைத்து நரசிம்மரையும் மனதார நினைத்து ‘ஓம் நமோ நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை தினம்தோறும் 1008 முறை உச்சரித்து வரவேண்டும். பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் நரசிம்மரின் திருவுருவப்படம் இருக்காது. இருந்தாலும் பரவாயில்லை. பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

- Advertisement -

உங்கள் குடும்ப கஷ்டம் தீரும் வரை நரசிம்மரை விடாதீர்கள். இருக்க பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். இந்த கஷ்டத்திற்கு தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்று அவரிடம் முறையிடுங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்திலேயே எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வை கொடுக்கும் சக்தி கொண்டவர் இந்த நரசிம்மமூர்த்தி. நம்பியவர்களை கைவிடமாட்டார். இவர் உக்கிரமான தெய்வம் தான். ஆனால் அதே அளவு சக்தி வாய்ந்த தெய்வம் என்பதும் இவரை வழிபடுபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

narasimmar

இவரை நம்பி வழிபாடு செய்பவர்கள் மனதார கூட அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்க கூடாது. நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைத்தால், நமக்கும் தண்டனை கிடைப்பது நிச்சயம். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் உங்கள் குடும்பத்தோடு ஒருமுறை நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நல்ல வழியை அந்த நரசிம்மமூர்த்தி காட்டி கொடுப்பார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -