இந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

hpy fmly
- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஓடி ஓடி உழைப்பதற்கு காரணம் நாமும் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே தான். அந்த நிம்மதியும் சந்தோஷமும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் குடும்பத்தில் எந்தவித கஷ்டமும் இருக்கக்கூடாது. கஷ்டம் இருக்கக் கூடாது என்றால் செல்வ செழிப்பு அதிகமாக இருக்க வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செல்வ செழிப்பு அதிகரிக்கவும் கஷ்டங்கள் இன்றி நிம்மதியுடன் வாழவும் செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். கஷ்டமே இல்லாத மனிதர் என்று யாரும் இந்த உலகத்தில் கிடையாது. ஏன் அனைத்து உயிரினங்களும் அவர்களுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கும். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் கடவுளின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால் அந்த கஷ்டங்களில் இருந்து நம்மால் எளிதில் வெளியே வந்து விட முடியும்.

- Advertisement -

அப்படி நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு செல்வ செழிப்பு அதிகரிப்பதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக இருப்பவர்தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் யார் ஒருவருக்கு கிடைக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. செல்வ செழிப்போடு மட்டுமல்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்பதுதான் உண்மை.

நல்ல வளர்பிறை நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். காலையில் சுத்தமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜையில் ஒரு பாத்திரம் எதற்கும் உபயோகப்படுத்தாத பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கலசம் வைக்கும் செம்பாக கூட இருக்கலாம். அந்த பாத்திரம் நிறைய தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் ஐந்து சொட்டுகள் பன்னீரை விட வேண்டும். பிறகு சிறிது மஞ்சள் தூள் போட வேண்டும். வீட்டில் தங்கம் இருந்தால் ஏதாவது ஒன்றை அந்த தண்ணீருக்குள் போட வேண்டும். தங்கம் இல்லாத சூழ்நிலையில் 8 ஒரு ரூபாய் நாணயங்களை அதற்குள் போட வேண்டும்.

- Advertisement -

பிறகு மல்லிகை பூவை அந்த தண்ணீரில் போட்டு அந்த பாத்திரத்தின் மீது கையை வைத்துக்கொண்டு “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்று 16 முறையும் “ஓம் குபேர லட்சுமி நமஹ” என்று 16 முறையில் கூற வேண்டும். பிறகு அந்த தண்ணீரை மல்லிகைப்பூவுடன் சேர்த்து பணம் நகை வைத்திருக்கும் இடங்களில் தெளித்து விட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக ஏற்பட்டு பணத்திற்கும் நகைக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. குடும்பத்தில் செல்வ செழிப்பு மேலோங்கி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு காய் உடன் இருந்தால் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் நாம் செய்து வரும் பொழுது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நம்முடைய வாழ்க்கை தரம் உயர்ந்துவிடும்.

- Advertisement -