இந்த ஒரு காய் உடன் இருந்தால் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும்.

kumatikai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்மறை எதிர்மறை சக்திகள் என்பது அவர்கள் உடலிலேயே இருக்கிறது. அதில் எந்த சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த மனிதன் தான் முடிவு செய்கிறான். நல்ல எண்ணங்களை நினைப்பவர்களுக்கு நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். அதே தீய எண்ணங்களை நினைப்பவர்களுக்கு எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் பார்க்கும் பார்வையினால் சிலருக்கு தீய எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அந்த எதிர்மறை ஆற்றல்களையும், தீய சக்திகளையும் விலக்குவதற்கு எந்த காய் உடன் இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு காய்க்கும், கனிக்கும், மலருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கின்றன. நம்முடைய ஆன்மிக ரீதியாக நாம் பல பழங்களையும், காய்களையும் பரிகாரத்திற்காகவும், ஆன்மீகத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் இன்று நாம் பார்க்கப் போவது தான் குமட்டிக்காய்.

- Advertisement -

இந்த காய் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் இருக்காது என்று கூறப்படுகிறது. கண் திருஷ்டி, போட்டி, பொறாமை என்று இருக்கும் பொழுது பிறரால் செய்யக்கூடிய எதிர்மறை சக்திகளாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓடியே விடும் என்று கூறப்படுகிறது. சரி இப்படி எதிர்மறை ஆற்றல்கள் நம்மிடம் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

யார் ஒருவர் செய்கின்ற செயலில் தடைகள் ஏற்பட்டு அவர்களால் எந்தவித முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்களோ, வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற விரக்தி நிலையை அடைகிறார்களோ அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

அப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய பிறந்த கிழமை அன்று இந்த குமட்டிக்காயை கையில் வைத்துக்கொண்டு கிழக்கு முகமாக பார்த்து நின்று 27 முறை தன் தலையிலிருந்து பாதம் வரை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த காயை எடுத்துக்கொண்டு யார் காலும் படாத இடத்தில் போட வேண்டும். பிறகு வீட்டிற்குள் வருவதுற்கு முன் கை கால்களை கழுவி விட்டு உள்ளே வர வேண்டும்.
பொதுவாக இந்த காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர அவரிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகி அவருக்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதனால் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற இதை செய்தாலே போதும்

இந்த எளிமையான தாந்திரீக முறையை நாம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நம்மால் எளிதில் விலக்க முடியும்.

- Advertisement -