இதுவரையில் எத்தனையோ பொருட்களை வைத்து பரிகாரம் செய்திருப்போம். வீட்டில் எப்போதுமே இருக்கக்கூடிய, இந்த இரண்டு பொருட்களை வைத்து பரிகாரம் செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாக பறந்து போகும்.

elakkai sad lady
- Advertisement -

மன கஷ்டம், பண கஷ்டம் என்று பல கஷ்டங்கள் இருக்கின்றன. அந்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து நிம்மதியுடன் வாழ்வது என்பது அரிதான செயலாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு பல பரிகாரங்களை நாம் மேற்கொள்கிறோம். இந்த ஆன்மீக தாந்த்ரீக பதிவில் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியுடன் வாழ்வதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு கஷ்டம் என்பது தனக்கு ஏற்படும் போது பாதிப்பு ஏற்படும். அதே போல் தன் குடும்பத்தாருக்கு கஷ்டம் ஏற்படும்பொழுது பாதிப்பு ஏற்படும். மேலும் தான் செய்யும் தொழிலில் கஷ்டம் ஏற்படும் பொழுது பாதிப்பு ஏற்படும். இதை மூன்றும் நீங்கும் பட்சத்தில் அவர் நிம்மதியாக வாழ்வார். இரண்டு பொருட்களை வைத்து இந்த மூன்று விதமான கஷ்டங்களையும் எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

தனக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திலிருந்து வெளிவருவதற்கு வெள்ளிக்கிழமை அன்று காலையில் பூஜை செய்த பிறகு ஒரு வெற்றிலையில் ஒரு ஏலக்காயை வைத்து மடித்து வெறும் வயிற்றில் வாயில் போட்டு மெல்ல வேண்டும். அந்த சாற்றை சிறிது நேரம் நம் வாயிலேயே வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வாயில் வைத்திருக்கும் பொழுது நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை நாம் நினைக்க வேண்டும். பிறகு அந்த சாற்றை மெதுவாக விழுங்க வேண்டும். பிறகு “ஓம் ஹரி ஓம்” என்ற மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தனக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தில் இருந்தும் விலகி தனக்கு தேவைப்படுகின்ற நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வெற்றிலையில் 18 ஏலக்காய்களை வைத்து மடித்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு “ஓம் ஹரி ஓம்” என்று 1008 முறை கூற வேண்டும். வெற்றிலை நன்றாக காய்ந்த பிறகு அந்த ஏலக்காய்களை எடுத்து அதில் உள்ள விதைகளை தானும் உண்டு, குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தன் குடும்பத்தில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி, நிம்மதியும், மனம் மகிழ்ச்சியும் பெறுவோம்.

- Advertisement -

திங்கட்கிழமை அன்று காலை ஒரு வெற்றிலையும் அதில் 28 ஏலக்காய்களை வைத்து மடித்து பூஜையில் வைக்க வேண்டும். பிறகு “ஓம் ஹரி ஓம்” என்ற மந்திரத்தை 1008 முறை கூற வேண்டும். கூறிய பிறகு அந்த மடித்து வைத்த வெற்றிலையை எடுத்து நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள் நீங்கி லாபங்கள் பெருகும். மேலும் தொழிலில் உள்ள எதிரிகள் அனைவரும் விலகுவர்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயார் நம் வீடு தேடி வந்து நிரந்தரமாக தாங்க இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளியுங்கள். எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும்.

ஒரே மந்திரம் தான் ஒரே வெற்றிலை தான் ஏலக்காய் மட்டும் எண்ணிக்கையில் மாறுகின்றன. இந்த அற்புதமான பரிகாரத்தை நாம் மேற்கொண்டு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும், நம் குடும்பத்தாருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும், நம் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் வெளிவந்து நிம்மதியுடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

- Advertisement -