மகாலட்சுமி தாயார் நம் வீடு தேடி வந்து நிரந்தரமாக தாங்க இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளியுங்கள். எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும்.

lakshmi negative energy
- Advertisement -

ஒரு மனிதனின் எண்ணம் நல்ல எண்ணமாகவும், தீய எண்ணமாகவும் இருப்பதற்கு அவனை சுற்றி இருக்கக்கூடிய அதிர்வலைகளே காரணமாக திகழ்கிறது. நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் நாம் நேர்மறையாக மட்டுமே செயல்படுவோம். அதே நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருப்பின் நம் எண்ணமும், செயலும் எதிர்மறையாக தான் இருக்கும். எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு நடக்கக்கூடிய அனைத்து செயல்களும் எதிர்மறையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் குடும்பமே அதனால் கஷ்டப்படும். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் ஏற்படவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறவும் எந்த தீர்த்தத்தை வீட்டில் தெளிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் இருக்கிறதோ அந்த வீட்டில் தான் தெய்வ கடாட்சம் இருக்கும். தெய்வ கடாட்சம் இருக்கும் வீட்டில் தான் செல்வ செழிப்பு மேலோங்கும். எதிர்மறையாக பேசினால் கூட அந்த இடத்தில் தெய்வங்களின் அருள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆதலால் நாம் என்றும் நேர்மறையாக தான் பேச வேண்டும். நேர்மறையாக தான் நினைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சில வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கும் அப்படிப்பட்ட சூழலில் அந்த எதிர்மறை ஆற்றல்களை விளக்குவதற்காக சில பரிகாரங்களை செய்வோம். அதிலும் மிகவும் குறிப்பாக பலர் ஹோமம் நடத்துவார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விநாயகர் ஹோமம், லட்சுமி ஹோமம் என்று பல ஹோமங்களை தங்கள் இல்லங்களில் நடத்தி வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை கொண்டு வருவார்கள்.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் நம்முடைய கைகள் பட்டிருக்கக் கூடாது. அந்த அளவுக்கு சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். பிறகு அதில் நாம் கஸ்தூரி மஞ்சளை போட வேண்டும். இரண்டு இனுக்கு வேப்பிலை அல்லது மா இலையை எடுத்து வந்து நன்றாக கலக்க வேண்டும். மஞ்சள் நன்றாக கரைந்த பிறகு அந்த தண்ணீரில் ஜவ்வாது பொடியை சேர்க்க வேண்டும். இந்த ஜவ்வாது பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

- Advertisement -

இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றுவதற்கு முன்பாக வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பிறகு விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிவிடும். நேர்மறை ஆற்றல்கள் பெருகும். ஜவ்வாதில் இருக்கும் மனத்திற்கும் சாம்பிராணி தூபத்திற்கும் மகாலட்சுமி தாயார் அடிமையாகி நம் வீட்டிற்கு வருகை புரிந்து நம் இல்லத்தை செழிப்புடன் வாழ வைப்பார்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கி துன்பப்பட்டு கொண்டு இருப்பவர்களா நீங்கள்? காரணம் என்ன வென்று தெரியாமலே கஷ்டப்படுபவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

மிகவும் எளிமையான முறையில் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு வரவழைத்து நிலையான செல்வங்களை பெற்று வளமோடு வாழலாம்.

- Advertisement -