குடும்ப பிரச்சினை தீர மந்திரம்

padmavathy manthiram
- Advertisement -

அமைதி நிலவக்கூடிய இடமாக திகழ்வதுதான் குடும்பம். வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்குள் வரும் பொழுது ஒருவித அமைதி ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படாத குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி, தனி குடும்பமாக இருந்தாலும் சரி பணம், சொத்து ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் எந்த மந்திரத்தை கூறி வழிபட அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மகாலட்சுமி தாயாரின் மறு அவதாரமாக திகழக்கூடியவள் தான் பத்மாவதி தாயார். பத்மாவதி தாயாரை நாம் முழுமனதோடு நம்பி வழிபடும் பொழுது நம்முடைய குடும்பத்தில் நிம்மதியை உருவாக்கக்கூடிய அனைத்து விதமான அம்சங்களையும் உருவாக்கித் தருவாள். மேலும் சொத்து ரீதியான பிரச்சினைகளும் பணரீதியான பிரச்சினைகளும் தீர்வதற்கு பத்மாவதி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறை திங்கட்கிழமை அன்றோ அல்லது வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றோ துவங்க வேண்டும். மேலும் இந்த வழிபாட்டை இரவு 9 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் பத்மாவதி தாயாரின் படம் என்பது வேண்டும். அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பத்மாவதி தாயாருக்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பத்மாவதி தாயாருக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அது கற்கண்டாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் எந்த நாளில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறோமோ அன்றைய நாளில் இருந்து தொடர்ந்து 48 நாட்கள் அசைவம் உண்பதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ பத்மாவதி பத்ம நேத்ர வஜ்ர வஜ் ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி”

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த முறையில் இரவில் குளித்துவிட்டு 9:00 மணிக்கு மேல் பத்மாவதி தாயாருக்கு தீபம் ஏற்றி வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை சமர்ப்பித்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பத்மாவதி தாயாரின் அருளால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சொத்து ரீதியான பணரீதியான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற சிவ மந்திரம்

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் கூறுபவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை நிலவும்.

- Advertisement -