கஷ்டம் நீக்கும் கால் படாத மண்

putru man
- Advertisement -

உலகத்தில் பிறந்த ஏழை முதல் கோடீஸ்வரர் வரை அனைவருக்கும் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. அந்த கஷ்டத்தை மீறி அதை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்பவர்களே வெற்றிகரமான மனிதர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வெற்றிகரமான வாழ்க்கையை அமைப்பதற்கு நம்முடைய கடின முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதனுடன் சேர்ந்து இந்த ஒரு மண் நம்மிடம் இருந்தால் நாம் தான் அதிர்ஷ்டசாலி. அந்த மண்ணை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும் தடைகளுக்கும் அவர்களது கர்ம வினைகளும் கிரகங்களின் நிலைகளுமே காரணமாக அமைகின்றன. இந்த கர்ம வினைகளையும், கிரகங்களின் தோஷங்களையும், நிலைப்பாட்டையும் மாற்றுவதற்கு பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்குவதற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த குலதெய்வ வழிபாட்டை அடிக்கடி மேற்கொள்ள இயலாதவர்கள் குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து வந்து வீட்டில் தினமும் வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள்.

அப்படிப்பட்ட குலதெய்வ மண்ணிற்கு இணையான சக்தியை கொண்ட மண்ணாக திகழ்வதுதான் கால் படாத மண். கரையான் கட்டும் புற்று மண் தான் கால் படாத மண். இதில் மூன்று வகைகள் இருக்கிறது. ஒன்று கரையான் கட்டிய புற்றில் பாம்பு குடியிருக்கும் புற்றுமண். மற்றொன்று கரையான் இருக்கும் புற்றுமண். மூன்றாவது மண்ணாக கரையான் மரத்தில் கட்டும் புற்றுமண். இந்த மூன்று மண்ணும் கிடைத்தால் மிகவும் விஷேசம் அல்லது இந்த மூன்று மண்ணில் ஏதாவது ஒரு மண் கிடைத்தால் கூட போதும்.

- Advertisement -

அப்படி கிடைக்கும் அந்த மண்ணை திங்கட்கிழமை அன்று எடுக்க வேண்டும். மேலும் உச்சிவேளை ஆன நண்பகல் 12:00 மணியிலிருந்து 1:00 மணி வரை இந்த மண்ணை எடுக்கக் கூடாது. காலையிலே அல்லது மாலையிலோ தான் எடுக்க வேண்டும். இவ்வாறு எடுத்து வந்த இந்த மண்ணை செவ்வாய்க்கிழமையில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாட்கள் தலை மற்றும் உடம்பில் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பதன் மூலம் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக விளங்குகிறது.

மேலும் இந்த மண்ணை ஒரு மஞ்சள் தடவிய வெள்ளை துணியில் வைத்து கட்டி வீட்டு நிலை வாசலிலோ அல்லது பூஜையறையிலோ வைத்து தினமும் வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும். முடிந்தால் ஒரு சிறிய மூட்டையாக கட்டி பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியிலோ அல்லது பர்சிலோ வைத்து கொள்ளலாம். தினமும் இந்த மண்ணை சிறிதளவு எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் வெளியில் செல்லும் பொழுது ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தடைகளும் நம்மை விட்டு விலகி ஓடும்.

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யங்கள் தரும் மகாலட்சுமி பூஜை

மிகவும் அற்புதமான சக்தி கொண்ட இந்த மண் உங்கள் கண்ணில் பட்டால் உடனே அதை எடுத்து உங்களுடைய கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -