சகல ஐஸ்வர்யங்கள் தரும் மகாலட்சுமி பூஜை

mahalakshmi poojai
- Advertisement -

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்களுக்கு அந்த மேலோகம் இல்லை என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பணத்திற்கு என்று தனி மதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தையும் பொருளையும் அருளக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் விளங்குகிறார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்யும் முறை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பணம் இருந்தால் நம்முடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். பணத்தை மட்டும் மகாலட்சுமி தாயார் அருள் செய்வது கிடையாது. அனைத்து விதமான சகல சம்பத்துகளையும் அருள் செய்யும் ஆற்றல் மகாலட்சுமி தாயாருக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட தாயாரின் அருளை பெறுவதற்கு அவளின் மனம் குளிர அவளுக்கு பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை செய்பவருக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து வளர்பிறை சுப முகூர்த்த நாளாகவும் பார்த்து செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து 9 நாட்கள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பது அல்லது வெள்ளிக்கிழமை அன்று முடிப்பது மிகவும் விசேஷமாக இருக்கும். வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் விக்ரஹத்தை வைத்தும் பூஜை செய்யலாம். தொடர்ந்து ஒன்பது நாட்களும் அந்த விக்கிரகத்திற்கு சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் என்பது சந்தன கட்டையில் இளைத்து அபிஷேகம் செய்தால்தான் முழு பலனையும் பெற முடியும். அதுவே சுத்தமான சந்தனமாக கருதப்படுகிறது. அபிஷேகம் செய்து முடித்த பிறகு சந்தனம் குங்குமம் வைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பிச்சிப்பூ, மல்லிகைப்பூ போன்ற பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம் படிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் படிக்க இயலாதவர்கள் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை மனதால் கூறினால் போதும். பூக்களை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது சுத்தமான தேனில் ஒவ்வொரு பூவையும் தொட்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை வைத்து அர்ச்சனை செய்வது மிகவும் நல்ல பலனை தரக்கூடியது. அர்ச்சனை செய்து முடித்த பிறகு ஆராத்தி எடுத்து அந்த ஆராத்தியை துளசி செடியில் ஊற்றிவிட்டு விக்ரஹத்தை வடக்கு பார்த்தவாறு சிறிது நகர்த்தி வைத்து விட வேண்டும்.

விக்ரகம் இல்லாமல் லட்சுமி படம் மட்டும் வைத்திருப்பவர்கள் அந்த படத்தை சுத்தம் செய்து சுத்தமான சந்தனம் குங்குமம் இட்டு மல்லிப்பூ மாலை சூடி அர்ச்சனை செய்ய வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்து வர மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதோடு தாயாருக்கு அர்ச்சனை செய்த பூக்களை எடுத்து வீட்டு நிலை வாசலின் இருபுறமும், வீட்டை சுற்றி 8 திசைகளிலும் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சம் நம் வீட்டிற்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை வீட்டில் தூபம் போடும் முறை

மிகவும் எளிய முறையில் மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நம்பி இந்த பூஜையை 9 நாட்கள் தொடர்ந்து செய்து வர மகாலட்சுமி தாயாரின் அருளை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -