கஷ்டங்களை தீர்க்கும் பரிகாரம்

kastam neenga
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருப்பதற்கு அவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு கிரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கிரகங்களால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் நீக்க செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கிரகங்களில் சாதகமான கிரகம் பாதகமான கிரகம் என்று இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ராகு மற்றும் சனியால் நமக்கு அதிகமான அளவு பாதகமான சூழ்நிலையே ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ராகு மற்றும் சனியின் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கும் பிற கிரகங்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு தேவைப்படுவது கருப்பு எள் பொடி. கருப்பு எள்ளை வாங்கி வந்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் செய்யலாம். ஒரு ஸ்பூன் அளவிற்கு எள்ளு பொடியை எடுத்து வலது கையில் வைத்துக்கொண்டு வீட்டின் வரவேற்பு அறையில் மேற்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.

பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நினைத்து அவை அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த கஷ்டங்கள் அனைத்தும் இந்த எள்ளுப்பொடியில் வந்து சேர்ந்து விட்டது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வீட்டிற்கு வெளியே வந்து மேற்கு பார்த்தவாறு நின்று கொண்டு வலது கையில் இருக்கும் பொடியை இடது கைக்கு மாற்றிக் கொண்டு ஊதி விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு ஊதும் பொழுது இந்த பொடியானது நம் மேலோ அல்லது வீட்டிற்குள்ளோ படக்கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஊதிய பிறகு தலையில் இருக்கக்கூடிய தலைமுடி ஒன்றை பிடுங்கி கீழே போட்டு விட வேண்டும். தலையில் இருந்து உதிர்ந்த முடியை எடுத்து வைத்து உபயோகப்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து நான்கு சனிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பரிகாரத்தை செய்து முடித்த பிறகு கை கால் முகங்கள் அனைத்தையும் கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும். இந்த பரிகாரத்தை ஆண்கள் செய்யும்பொழுது மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கக் கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதை தவிர்த்து பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மாதவிடாய் நேரங்களில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: எல்லோரையும் செல்வந்தர்களாக மாற்றும் லிங்க வழிபாடு

இந்த முறையில் நாம் தொடர்ந்து பரிகாரம் செய்வதன் மூலம் நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் கிரகங்களால் ஏற்பட்ட கஷ்டங்களும் நீங்கும்.

- Advertisement -