கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு

kastam theera
- Advertisement -

வாழ்க்கையில் நம் கைமீறி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வங்கள் தான். அந்த தெய்வங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும் இஷ்ட தெய்வங்கள் அல்லது அருகில் இருக்கக் கூடிய தெய்வங்களின் ஆலயத்திற்கு செல்வோம்.

எதுவாக இருப்பினும் இறைவனை பாதங்களில் சரணடைவதே பிரச்சனைக்கு தீர்வு என்பது பலரின் நம்பிக்கை. அப்படி நாம் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் வேளையில் வழிபடக் கூடிய சில வழிபாட்டு முறைகளில் சிலவற்றையும், வணங்கக் கூடிய தெய்வங்களை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கவலைகள் துன்பங்கள் தீர வழிபாடு

மனிதனுக்கு பிரச்சனைகள் எப்போதும் இருக்கத் தான் செய்யும். ஒரு சில நேரங்களில் நாம் அதை கடந்து விடுவோம் அல்லது சமாளித்து விடுவோம். சில நேரங்களில் பிரச்சனைகள் நம்மை அப்படியே அழுத்தி விடும். வேறு எதுவும் செய்ய முடியாத நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். அந்த நேரத்தில் வழிபாடுகள் நம்மை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

பிரச்சனைகள் அதிகரித்து மீள முடியாத துயரில் இருக்கும் போது உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு நான்கு எலுமிச்சை பழம் மஞ்சள் குங்குமம் வாங்கிச் செல்லுங்கள். இத்துடன் உப்பு மிளகும் வாங்கி செல்லுங்கள். ஆலயத்தில் இருக்கும் திரிசூலத்திற்கு முதலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு திரிசூலத்தில் மூன்று எலுமிச்சை பழத்தை சொருகி விட்டு அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சூலத்தின் அடியில் நீங்கள் வாங்கி சென்ற உப்பையும் மிளகையும் கொட்டி விடுங்கள். அதன் பிறகு சூலத்தின் நடுவில் இருக்கும் எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக் கொண்டு உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை அதில் சொருகி விட்டு வந்து விடுங்கள்.

எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து நிலை வாசலில் கட்டி விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவது வேறு எந்த விதமான பிரச்சனைகளும் உங்களை அணுகாது. அதே போல் வீட்டு வாசலில் தினமும் இரண்டு தீபம் ஏற்றுங்கள். அதற்கு சிகப்பு திரி போடுங்கள்.

- Advertisement -

இப்படி ஏற்றும் போது ஓம் பைரவாய நமக என்ற வார்த்தையை சொல்லுங்கள். எந்த துன்பமும் உங்களை அண்டாமல் காக்க இது ஒரு அற்புதமான முறை. நம்முடைய இத்தனை பிரச்சனைகளுக்கும் கிரக சூழ்நிலைகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மனம் சந்தோஷமாக இருப்பதும், கோபப்படுவதும் துன்பத்தினால் அவதிப்படுவதும் இவைகளாலே என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரங்கள் இவைகளை சரி செய்யும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி தீராத கண் திருஷ்டி போன்றவை கூட இதன் மூலம் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. முதலில் பிரச்சனைகள் வரும் போது சோர்ந்து விடாமல் அதை எதிர்த்து போராடும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர அப்பளம் பரிகாரம்

அத்துடன் சேர்த்து நாம் செய்யும் வழிபாடும் பரிகாரங்களும் துன்பத்திலிருந்து நம்மை விரைவில் வெளிக் கொண்டு வரும். இந்த பரிகாரங்கள் நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகளுக்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை செய்து கொள்ளலாம்.

- Advertisement -