அதிர்ஷ்டம் தேடி வர அப்பளம் பரிகாரம்

hanuman pray lady
- Advertisement -

நம்மில் அனைவருக்குள்ளும் இந்த ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கும். அதாவது நாமும் தினமும் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம் ஆனாலும் நம்மிடம் பணம் தங்குவதில்லை நம்முடைய பொருளாதார நிலை குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர்வதில்லை. ஆனால் இந்த மார்வாடிகள் மட்டும் எப்போதுமே பணம் வரவுடன் இருக்கிறார்கள் எப்படி ? என்கிற கேள்வி நிச்சயம் நூறில் ஒருவருக்காவது இருக்கும்.

செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தங்களுடனே அவர்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ள சில தாந்திரீகம் பரிகாரங்கள் விசேஷ பூஜைகள் என செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி மாறுபாடுகள் செய்யக் கூடிய ஒரு அற்புதமான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

திடீர் அதிர்ஷ்டம் தரும் அப்பளம் பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் சனிக்கிழமை அதாவது நாளைய தினம் செய்ய வேண்டும். நாளைய தினத்தை தவற விட்டால் அடுத்த அமாவாசை வரை காத்திருக்க வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை செய்யும் வரை சாப்பிட கூடாது. ஆகையால் காலையிலே இதை செய்வது சிறந்தது.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு உளுந்தினால் செய்த அப்பளம் ஒன்று தேவை. இந்த அப்பளத்தின் மேல் சிறிதளவு கடுகு எண்ணெய் இரண்டு புறமும் தேய்த்து விடுங்கள். அதன் பிறகு அரை ஸ்பூன் தயிர் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தயிரின் மேல் கொஞ்சம் செந்தூரம் வைக்க வேண்டும். இதையெல்லாம் வைத்த பிறகு இந்த அப்பளத்தை அப்படியே கொண்டு அரச மரத்தடியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதை நீங்கள் வீட்டில் தயார் செய்து கொண்டு போய் வைத்தாலும் சரி அல்லது அரச மரத்தடியிலே கொண்டு போய் இதை தயார் செய்து வைத்தாலும் சரி எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை. அரச மரத்தடியில் வைக்கும் இந்த அப்பளத்தை அங்கு இருக்கும் ஜீவராசிகள் உண்ண வேண்டும் இது தான் இந்த பரிகாரத்தின் தாத்திரிகம். நாளை சனிக்கிழமையும் துவங்கிய இந்த பரிகாரத்தை 11 சனிக்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதில் சேர்த்து இருக்கும் செந்தூரம் மகாலட்சுமி தாயார் ஆஞ்சநேயர் இருவருக்கும் உகந்த பொருள். இது தான் வடநாட்டவர் இந்த செந்தூரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதன் காரணம். அதே போல் உளுந்து ராகு பகவானுக்குரியது, தயிர் சந்திரன் ஆதிக்கம் கொண்டது. கடுகு எண்ணையும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது.

- Advertisement -

இப்படி இத்தனை கிரகங்களும் தேவதைகளும் இணைந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது அதிர்ஷ்டங்களும் செல்வ வளங்களும் நம்மை தேடி நம் இல்லம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிகாரம் மிக மிக எளிமையானது தான். ஆனால் இந்த பரிகாரத்தின் மூலம் கிடைக்கும் பலன் மிக அபாரமானது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்த வேலை கிடைக்க வழிபாடு

எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடனும் நம்முடைய விடாமுயற்சியுடனும் செய்யும்பொழுது நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -