தீய சக்தியை விரட்டி அடிக்க அமாவாசை பரிகாரம்

amavasai glass
- Advertisement -

ஒரு மனிதனை பாடாய்படுத்தி ஒன்றில்லாமல் செய்யக் கூடிய சக்திகளில் இந்த கண் திருஷ்டி தீய சக்திகளுக்கு எப்போதுமே நிகர் அவைகள் தான். ஒரு மனிதனுக்கு வியாதி வந்து அவன் நிலை குலைந்து போவதற்கு கூட சில காலங்கள் எடுத்துக் கொள்ளும். இது போல தீய சக்திகளும் கண் திருஷ்டிகளும் நம்மளை ஆட்கொண்டு விட்டால் அவற்றிலிருந்து நாம் வெளி வருவதற்குள் ஒன்றும் இல்லாமல் ஆகி விடுவோம்.

அத்தகைய தீய சக்திகளையும் கண்திருஷ்டிகளையும் விரட்டி அடிக்கத் தான் நம் முன்னோர்கள் சில முறைகளை பின்பற்றி வந்தார்கள். இதனால் தான் காலத்திலிருந்து திருஷ்டி சுற்றி கழிப்பது வீட்டை சுற்றி எப்போதும் நேர்மறை எண்ணங்கள் இருக்கும் படியான காரியங்களை செய்வது என பார்த்து பார்த்து செய்தார்கள்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் இதையெல்லாம் செய்ய பெரும்பாலானருக்கு நேரம் இருப்பதில்லை. இதனாலே பலரும் பலவிதமான சிக்கலில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும். உடனே அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற பரிகாரம்

தீய சக்திகள் வெளியேற நாம் செய்யும் பரிகாரங்களுக்கு எத்தனை பலனோ, அதே போல அதை செய்யும் நாட்களுக்கும் பலன் அதிகம் உண்டு. சில பரிகாரங்களை நாம் அதற்குரிய நாளில் செய்யும் போது நிச்சயம் பலன் இரட்டிப்பாக உடனே கிடைக்கும்.

- Advertisement -

அப்படியான நாள் தான் அமாவாசை. அதிலும் இந்த தை அமாவாசை அல்லது முக்கிய நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் இந்த அமாவாசை செய்வது அமோகமான பலனை நமக்குத் தரும். ஆகையால் இன்று இரவே இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். பரிகாரத்தை செய்வதற்கு ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த டம்ளர் கண்ணாடி டம்ளராக இருந்தால் மிக மிக நல்லது இல்லாவிட்டால் உங்களிடம் இருக்கும் டம்ளரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று இரவு அனைவரும் உணவு முடித்து உறங்கிய பிறகு தான் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தமிழரின் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து விடுங்கள். இந்த மஞ்சளை தண்ணீருடன் நன்றாக கலந்து விட்டு, உங்கள் வீட்டின் வரவேற்பறையின் வடகிழக்கு மூலையில் இந்த தண்ணீரை வைத்து விட்டு, நீங்களும் உறங்க சென்று விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் அனைவரும் விழிக்கும் முன்பாக எழுந்து இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம் இந்த பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல்கள் உங்களை தொடரும் கண் திருஷ்டி போன்றவை அனைத்தும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த டம்ளர் வைத்த பிறகு வரவேற்பறையில் தூங்கலாமா என்ற சந்தேகம் வேண்டாம். அதெல்லாம் ஒன்றும் தவறு கிடையாது. முன்பெல்லாம் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் வீட்டில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருப்பார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.அது போன்றதொரு தாந்திரீக பரிகாரம் தான் இதுவும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தை அமாவாசை பரிகாரம்

இந்த பரிகாரத்தை மாதந்தோறும் வரும் அம்மாவாசையில் கூட செய்யலாம். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -