செல்வம் பெருக தை அமாவாசை பரிகாரம்

amavasai kal uppu
- Advertisement -

அமாவாசை என்றாலே விசேஷமான தினம் தான். அன்றைய தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் அன்றைய தினத்தில் தெய்வ வழிபாடும் சிறந்தது தான். அமாவாசைகளில் ஒரு சில அமாவாசைகள் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த வருடம் தை மாத வெள்ளிக்கிழமை வந்திருக்கிறது. இது மேலும் நல்ல பலன்களை தருவதாக அமைந்திருக்கிறது. இத்தகைய அற்புதமான நாளை தவிர விடாமல் நம்முடைய முன்னோர் வழிபாட்டுடன் நம் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் சில தாந்திரீக பரிகாரம் முறைகளை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வ வளத்தை பெருக்கிக் தரும் தாந்திரீக பரிகாரம்

முன்பெல்லாம் ஒருவருவரை ஒருவர் வாழ்த்துவது என்றாலே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று தான் வாழ்த்துவார்கள். இதற்கு காரணம் 16 வகை செல்வங்களும் ஒருவருக்கு கிடைக்கும் போது அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் யாரும் கிடையாது.

இன்றைய கால சூழ்நிலையில் இத்தனை செல்வங்களையும் ஒருவர் பெற்று வாழ்கிறாரா என்றால் நிச்சயமாக சந்தேகம் தான். அப்படியானால் இத்தனை வகையான செல்வங்களை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இத்தகைய செல்வங்களைப் பெற நாம் பல முயற்சிகள் புண்ணியங்கள் தர்மங்கள் என இது போன்ற பல காரியங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

அத்துடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் இத்தனை செல்வங்கள் கிடைத்தால் ஒருவரின் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமோ அதை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிகாரத்திற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கல் உப்பு மட்டும் தான்.

கல்லுப்பை பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். இது நல்லவற்றுக்கும் பயன்படும் தீயவற்றை எடுக்கவும் பயன்படும். இந்த கல்லுப்பை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். இதற்கு மூன்று அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கு முழுவதுமாக கல் உப்பை நிரப்புங்கள். இதற்கு புதிதாக கடையில் வாங்கி கல் உப்பை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

இப்போது இந்த கல் உப்பை உங்கள் வீட்டில் மூன்று இடத்தில் வைக்க வேண்டும். ஒன்று வரவேற்பறை மற்றொன்று குளியலறை மூன்றாவதாக நம் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியே வைக்க வேண்டும். அதாவது வீட்டிற்குள் வரும் போது கல் உப்பை பார்த்து விட்டு நாம் வர வேண்டும். இது போல வைத்து விடுங்கள்.

மூன்று நாட்கள் கழித்து இந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு இந்த அகல் விளக்கை பத்திரப்படுத்தி வையுங்கள். இந்த கல்லுப்பு பரிகாரமானது நம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றி வீட்டிற்குள் நல்ல ஆற்றலையும் லட்சுமி கடாட்சத்தையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

தீய ஆற்றல் வெளியேறி நல்ல ஆற்றல் வீட்டுக்குள் நுழைந்தாலே நன்மைகள் ஒவ்வொன்றாக தானாக நடக்க ஆரம்பித்து விடும். அதிலும் கல் உப்பு தாயாரின் அனுகிரகம் பெற்றது. இதை வைத்து செய்யப்படும் இந்த பரிகாரத்தின் மூலம் நம்முடைய வீட்டின் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சொத்து தொடர்பான பிரச்சனை தீர முருகர் வழிபாடு

மேலும் மகிழ்ச்சியுடன் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -