கெடுதல் நினைப்பவர்கள் கூட நீங்க நல்லா இருங்கன்னு வாழ்த்த குளிக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் போதும். உங்களை நெருங்கும் தீமையெல்லாம் நன்மையாக மாறி விடும்.

bath man camphor
- Advertisement -

வாழ்க்கையில் நீங்கள் எத்தனை தான் நல்லவராக இருந்தாலும் கூட உங்களை குறை சொல்பவரும், உங்களுக்கு ஏதேனும் துன்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். மனிதர்கள் ஒரு புறம் இப்படி இருக்க ஒரு சில நேரங்களில் கிரகங்களும் கூட நமக்கு சாதகமாக இல்லாமல் நாம் எந்த செயலை செய்தாலும் அது முடிவில் தீமையை தரும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மனிதர்கள் தரும் பிரச்சனைகளையே நம்மால் சமாளிக்க முடியாத போது, கிரகங்களின் மாற்றத்தால் ஏற்படும் துன்பத்தை சமாளிப்பது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். இதற்காக நாம் ஏதாவது ஒன்று செய்ய முடியும் என்றால் அது தெய்வத்தை சரணடைவது ஒன்று தான். அந்த காலத்தில் எல்லாம் எந்த சூழ்நிலை இருந்தாலும் வீட்டில் தினமும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபட்டார்கள். இப்போது அப்படியான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற
நம்முடைய வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் நிறைந்ததாக தான் இருக்கும். அதை மாற்றக் கூடிய சக்தி தெய்வங்களுக்கு மட்டும் தான் உண்டு. எனவே நாம் தினமும் தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். காலை மாலை இரு நேரமும் வீட்டில் தீபம் ஏற்றுவதுடன் கற்பூர தீபாராதனை நிச்சயமாக காட்ட வேண்டும் என்று சாஸ்திரம் முதல் நம் வீட்டு முன்னோர்கள் வரை கூறியிருக்கிறார்கள்.

கற்பூர தீபாராதனை காட்டும் போது அதிலிருந்து வெளிப்படும் அந்த ஜுவாலையானது தெய்வ சக்தியை நம்முடன் இருக்க செய்வதுடன், நம்முடைய ஆரா சக்தியும் அதிகப்படுத்தி நம்முடைய மனதையும் ஒரு நிலைப்படுத்தி எண்ணங்களையும், செயல்களையும் நெறிப்படுத்தும்.

- Advertisement -

இத்துடன் நாட்டு மருந்து கடையில் கற்பூரம் எண்ணெய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இதை சனிக்கிழமை தோறும் நீங்கள் குளித்து முடித்த பிறகு கடைசி ஆக இருக்கும் கொஞ்சம் தண்ணீரில் இதிலிருந்து இரண்டு சொட்டுகளை விட்டு நன்றாக கலந்து அந்த தண்ணீரை ஊற்றி குளித்து முடித்து விடுங்கள். அதன் பிறகு உடனே துடைத்து விடாமல் ஐந்து நிமிடம் அந்த தண்ணீரானது உங்கள் உடம்பிலே இருக்க வேண்டும். அதன் பிறகு எப்போதும் போல் நீங்கள் துடைத்து உடை மாற்றிக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல் மறைவதுடன் உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களை கூட உங்களை நெருங்கும் போது அவர்கள் மனநிலை மாறும். கிரகங்களினால் ஏற்படும் இன்னகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரத்திற்கு ஒரு முடிவு கட்ட, வாசலில் கட்ட வேண்டிய 2 பொருள்:

வழிபாட்டுடன் கூடிய இந்த எளிய பரிகாரத்தை செய்து வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் கடந்து இன்பமான வாழ்க்கை வாழ வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -