சேமிப்பு பலப்படவும், கோடீஸ்வர யோகம் கிடைக்கவும் 5 ஒரு ரூபாய் நாணயங்களை உங்கள் வீட்டில் இந்த இடங்களில் மட்டும் வைத்துப் பாருங்கள்

money2
- Advertisement -

நம்பிக்கை என்ற ஒன்று இல்லாமல் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத இறைவனை வணங்குவதில்லை. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைப்பதன் மூலம் அவர் நமக்கான விஷயங்களை நடத்திக் கொடுப்பார் என்பது காலம்காலமாக அனைவரும் பின்பற்றிவரும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் வழக்கமாகும். அவ்வாறு இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்று பலவிதமான கடவுள்கள் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு பூஜைக்கும் தனிப்பட்ட பலன்கள் இருக்கின்றன. அதேபோல் செல்வம் பெருகுவதற்கும் பல விசேஷ பரிகாரங்கள் உள்ளன. அவ்வாறு அனைவரும் வீட்டில் செய்யக்கூடியதும், கோடீஸ்வர யோகம் தருவதுமான ஒரு ரூபாய் நாணய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sivan

பெரும்பாலான வீடுகளில் பணப்பற்றாக்குறை தீர்வதற்கும், பணத்தின் வரவு அதிகமாக இருப்பதற்கும், பலவித ஆன்மீக வழிபாடுகளை செய்து வருவார்கள். அவற்றுடன் சேர்த்து இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தையும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தின் மூலம் மகாலட்சுமி தாயாரும், குபேரரும் நமக்கு செல்வ வளங்களை அள்ளித் தருவார்கள்.

- Advertisement -

அவ்வாறு மகாலஷ்மி தாயாருக்கும் இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்க்கும் இடையே உள்ள சம்பந்தம் என்னவென்றால் பலரது வீடுகளின் பூஜை அறையில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபடுவதை பார்த்திருப்போம். எந்தவித மங்களகரமான காரியமாக இருந்தாலும் வெற்றிலை பாக்கின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருப்பார்கள். இவ்வாறு ஒரு ரூபாய் நாணயம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனை வைத்து பூஜை செய்யும்பொழுது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படுகிறது.

vijaya-lakshmi1

இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஒரு ரூபாய் நாணயத்தை மாதம்தோறும் சம்பளம் வாங்கியதும் முதலில் அதிலிருந்து ஒரு சிறிய தொகையுடன் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து ஒரு உண்டியலில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு வருடம் முழுவதும் இதனை சேமித்து வருட இறுதியில் திருப்பதிக்கு சென்று பெருமாள் உண்டியலில் இந்த தொகையை சேர்த்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பெருமாளின் அருள் கிடைத்து வீட்டின் செல்வ நிலை உயர்ந்திடும்.

- Advertisement -

அடுத்ததாக வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் உப்பு வாங்குவது என்பது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கவல்லது. அவ்வாறு வாங்கப்படும் உப்பிலிருந்து சிறிதளவு எடுத்து, ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து, வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுது, அதன் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, தீப தூபம் காண்பித்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறமுடியும்.

uppu

அடுத்ததாக வியாழக்கிழமை லஷ்மி குபேர பூஜை செய்யும்பொழுது ஒரு சிறிய கிண்ணம் அல்லது மரப் பெட்டியில் 108 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து கொண்டு, அவற்றை கைகளால் அள்ளி மறுபடியும் அந்தக் கிண்ணத்தில் போட வேண்டும். இவ்வாறு நாணயங்களின் ஒலியை எழுப்பி குபேரருக்கு பூஜை செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும்.

அடுத்ததாக எப்போதும் உங்கள் வீட்டில் ஒரு சேமிப்பு உண்டியலை வைத்திருக்க வேண்டும். தினமும் குளிகை நேரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை அதில் சேர்த்து வைப்பதன் மூலம் வீட்டில் பண தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். அவ்வாறு சந்தோஷமாக இருக்கும் பொழுதும், துன்பமாக இருக்கும் பொழுதும் இந்த உண்டியலில் சிறிய தொகையுடன் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது நமது வீட்டில் பணப் பற்றாக்குறை என்பதே இருக்காது.

one-rupee0

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயங்கள் அல்லது குறைவாக இருந்தாலும் சரி அவற்றை எடுத்துக் கொண்டு, அதனை பூஜை அறையில் வைக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தின் பின்னாடி ஒரு ரூபாய் நாணயங்கள் பிரதிபலிக்குமாறு ஒரு சிறிய கண்ணாடியை வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாணயம் கண்ணாடியில் எப்படி பலமடங்காக பிரதிபலிக்கிறதோ அவ்வாறு நமது வீட்டிலும் பணம் அதிக அளவில் சேர்ந்து கொண்டிருக்கும்.

- Advertisement -